இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மத்திய கிழக்கில் போர்நிறுத்தம் ஏற்பட டிரம்ப் செயலாற்ற வேண்டும்: இராக் பிரதமர்

மத்திய கிழக்கில் போர்நிறுத்த நடவடிக்கைகள்: அமெரிக்காவின் அடுத்த அதிபர் டிரம்ப்பிடம் இராக் வலியுறுத்தல்

News image
- படம் | AP
Updated On :9 நவம்பர் 2024, 11:29 am

DIN

இஸ்ரேல், காஸா, லெபனான், ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்குப் பகுதிகளில் போர்ப்பதற்றம் தணியாமல் நீடிக்கிறது. இந்த நிலையில், மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மீண்டும் அமைதி நிலவ, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள டொனால்ட் டிரம்ப் செயலாற்ற வேண்டுமென இராக் பிரதமர் சூடானி வலியுறுத்தியுள்ளார்.

காஸா மீதான இஸ்ரேலின் ராணுவத் தாக்குதல்கள் முடிவுக்கு வராமல் தொடரும் நிலையில், லெபனான், ஈரான் நாடுகளில் இருந்து செயல்படும் ஆயுதப்படைகளைக் குறிவைத்தும் இஸ்ரேல் ராணுவம் அடுத்த கட்டமாகத் தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது.

இந்த நிலையில், இராக்கை சுற்றிலும் போர்ப் பதற்றம் நிலவுவதால் தங்கள் நாட்டின் மீது தாக்குதல்கள் நிகழ்த்தபடாமலிருப்பதை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை இராக் அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் அடுத்த அதிபராகும் டிரம்ப்பிடம் இராக் தரப்பிலிருந்து போர் நிறுத்த நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அடுத்த அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்பை வெள்ளிக்கிழமை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு இராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி பேசியுள்ளார்.

அப்போது டிரம்ப்பிடம், ‘மத்திய கிழக்குப் பிராந்தியங்களில் போர் நிறுத்தம் ஏற்பட செயலாற்றப் போவதாக தான் தேர்தல் வாக்குறுதியளித்தபடி டிரம்ப் செயலாற்ற வேண்டுமென்பதை’ சூடானி வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளதாக இராக் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய கிழக்குப் பிராந்தியங்களில் போர் நிறுத்தத்துக்கு ஒருங்கிணைந்து முயற்சிகளை மேற்கொள்ள அமெரிக்கா - இராக் ஆகிய இரு தரப்பும் சம்மதித்துள்ளன.

ஈரானிலிருந்து செயல்படும் இஸ்லாமிக் ஸ்டேட்(ஐ எஸ்) ஆயுதப்படைகளின் தாக்குதல்களை சமாளிக்க இராக்குக்கு சுமார் 2,500 அமெரிக்க படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், அமெரிக்க மற்றும் இராக் படைகளை குறிவைத்து இராக்கில் ஈரான் ஆதரவு அமைப்புகள் மூலம் டிரோன் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.