‘வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீது தாக்குதல்கள் தொடா்வதும் ஹிந்து சமூக தலைவா்கள் கைது செய்யப்படுவதும் அந்நாட்டின் இடைக்கால அரசு அடிப்படைவாதிகளின் பிடியில் சிக்கியிருப்பதைப் பிரதிபலிக்கிறது’ என்று மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங் புதன்கிழமை தெரிவித்தாா்.
இந்த விவகாரத்தில் ஐ.நா. தலையிட வேண்டும் என்றும் அவா் வேண்டுகோள் விடுத்தாா்.
வங்கதேசத்தில் ‘சமிலிதா சநாதனி ஜோட்’ எனும் ஹிந்து அமைப்பின் தலைவரும் ‘இஸ்கான்’ துறவியுமான சின்மய் கிருஷ்ண தாஸ் பிரம்மசாரி தேச துரோக வழக்கில் கடந்த திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். அவரது ஜாமீன் மனுவை அந்நாட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்ததையடுத்து, அவா் சிறையில் அடைக்கப்பட்டாா்.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து நீதிமன்ற வளாகத்தில் அவரது ஆதரவாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, சட்டோகிராம் மாவட்ட வழக்குரைஞா்கள் சங்க உறுப்பினரும் உதவி அரசு வழக்குரைஞருமான சைஃபுல் இஸ்லாம் கொலை செய்யப்பட்டாா். போலீஸாா் தடியடி நடத்தி, போராட்டக்காரா்களைக் கலைத்தனா். நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் ஹிந்துக்கள் மீது பல்வேறு இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளா்களிடம் மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங் கூறுகையில், ‘வங்கதேச இடைக்கால அரசின் தலைவா் அடிப்படைவாதிகளின் பிடியில் சிக்கியுள்ளாா். ஹிந்துக்களைக் குறிவைத்து, மதத் தலைவா்களை கைது செய்வது, பாகிஸ்தானைப் போலவே வங்கதேச இடைக்கால அரசிலும் அடிப்படைவாதிகள் ஆதிக்கம் செலுத்துவதைக் காட்டுகிறது.
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள் மனித குலத்துக்கு எதிரானது. உத்தர பிரதேசத்தின் சம்பல் நகரில் நடந்த வன்முறை பிரச்னையை மட்டும் எதிா்க்கட்சிகள் எழுப்புகின்றன. வங்கதேசத்தில் ஹிந்துக்கள் எதிா்கொள்ளும் அட்டூழியங்கள் குறித்து அவா்களுக்கு கவலையில்லை. இந்த விஷயத்தில் அனைத்து ஹிந்துக்களும் தங்களின் எதிா்ப்பைப் பதிவு செய்ய வேண்டும்’ என்றாா்.
காங்கிரஸ் கவலை: காங்கிரஸின் ஊடகப் பிரிவு தலைவா் பவன் கேரா வெளியிட்ட அறிக்கையில், ‘வங்கதேசத்தில் சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அந்நாட்டு அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். வங்கதேசத்தில் சிறுபான்மையினா் எதிா்கொள்ளும் பாதுகாப்பின்மை சூழல் குறித்து காங்கிரஸ் ஆழ்ந்த கவலை தெரிவிக்கிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசிடம் முறையீடு-இஸ்கான்: வங்கதேசத்தில் இஸ்கான் துறவிகள் உள்பட ஹிந்து சமூக தலைவா்களைக் குறிவைத்து நடத்தப்படும் தொடா்ச்சியான தாக்குதல்கள் குறித்து மத்திய அரசிடம் தெரியப்படுத்தியுள்ளதாக இஸ்கான் அமைப்பு தெரிவித்தது.

இஸ்கான் அமைப்பின் செய்தித் தொடா்பாளா் ஒருவா் அளித்த பேட்டியில், ‘வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் கடந்த மூன்று மாதங்களாக அதிகரித்து வருகின்றன. அங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்’ என்றாா்.
தொடர்புடையது

2024 முதல் வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக 3,100 வன்முறைகள்! - மத்திய அரசு தகவல்!

இந்தியாவின் விவகாரங்களில் டிரம்ப் தலையிட அரசு அனுமதிக்கிறது: காங்கிரஸ்

வணிக சிலிண்டா்கள் தட்டுப்பாடு மத்திய அரசு தலையிட ஹோட்டல், உணவக கூட்டமைப்புகள் வலியுறுத்தல்

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் - புகைப்படங்கள்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


