திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மனிதநேயம்..! மியான்மர் சென்றடைந்த 442 மெட்ரிக் டன் உணவுப் பொருள்கள்!

மியான்மருக்கு 442 மெட்ரிக் டன் உணவுப் பொருள்கள் அனுப்பிவைப்பு மியான்மருக்கு இந்தியாவிலிருந்து 442 மெட்ரிக் டன் உணவுப் பொருள்கள்..!

News image
- படம் | இந்திய தூதரகம், மியான்மர் பதிவு
Updated On :5 ஏப்ரல் 2025, 1:47 pm

DIN

நிலநடுக்கத்தால் நிலை குலைந்துள்ள மியான்மருக்கு இந்தியாவிலிருந்து கூடுதலாக 442 மெட்ரிக் டன் உணவுப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

மியான்மரில் கடந்த வாரம் நிகழ்ந்த சக்திவாய்ந்த தொடா் நிலநடுக்கங்களால் அந்நாட்டின் பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த இயற்கைப் பேரிடரில் உயிரிழப்பு 3,300-ஆக உயர்ந்திருப்பது கவலையளிக்கும் நிலையில், சுமார் 4,000-க்கும் அதிகமானோா் காயமடைந்துள்ளனா்.

இதனிடையே, மியான்மரில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் உதவி வருகின்றன. ‘ஆபரேஷன் பிரம்மா’ திட்டத்தின் கீழ், பல நூறு டன் நிவாரணப் பொருள்களையும், மீட்புக் குழுவினரையும், மருத்துவக் குழுவையும் இந்தியா அங்கு அனுப்பியுள்ளது.

மியான்மருக்கு மனிதாபிமான உதவியாக இந்தியாவிலிருந்து கடந்த ஒரு வார காலத்தில் பல டன் அளவிலான உணவுப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், விசாகப்பட்டினத்திலிருந்து 442 மெட்ரிக் டன் அளவிலான உணவுப் பொருள்களுடன் புறப்பட்ட கடற்படைக் கப்பல் மியான்மரின் திலாவா துறைமுகத்தை சனிக்கிழமை(ஏப். 5) சென்றடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story image

405 மெட்ரிக் டன் அரிசி, 30 மெட்ரிக் டன் சமையல் எண்ணெய், 5 மெட்ரிக் டன் பிஸ்கட்கள், 2 மெட்ரிக் டன் நூடுல்ஸ் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் மியான்மருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக வெளியுறவு விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மருக்கு மனிதாபிமான அடிப்படையில் நிவாரண உதவிகளை வழங்க குவாட் நாடுகளான இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகள் சேர்ந்து 20 மில்லியன் டாலர் கொடுக்க முன்வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.