ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

போப் பிரான்சிஸ் காலமானார்

கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவால் காலமானார்

News image

போப் பிரான்சிஸ்

Updated On :21 ஏப்ரல் 2025, 1:38 pm IST

கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் காலமானாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு வயது 88.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸ் மறைவு செய்தி அறிந்து உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவ மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

நிமோனியா பாதிப்பால் மருத்துவமனையில் 5 வாரங்களுக்கு மேல் சிகிச்சை பெற்று கடந்த மாதம் வீடு திரும்பிய கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ், ஈஸ்டா் திருநாளையொட்டி செயின்ட் பீட்டா்ஸ் சதுக்கத்தில் மக்களைச் சந்தித்து ஆசி வழங்கியிருந்தார்.

இந்நிலையில், இன்று காலை வாடிகனில் உள்ள தனது இல்லத்தில் காலமானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென் அமெரிக்காவிலிருந்து கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவாக தேர்வு செய்யப்பட்ட முதல் திருத்தந்தை போப் பிரான்சிஸ் என்பது குறிப்பிடத்தக்கது

2013ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி கத்தோலிக்க திருச்சபையின் 266-ஆவது திருத்தந்தையாக போப் பிரான்சிஸ் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

ஆர்ஜென்டினாவில் பிறந்த போப் பிரான்சிஸ், 12 ஆண்டுகளாக கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவாகவாக பொறுப்பு வகித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி நிமோனியா பாதித்து மருத்துவமனையில் 38 நாள்கள் சிகிச்சைபெற்று வந்த நிலையில், கடந்த மாதம் மருத்துவமனையிலிருந்து வீடு, திரும்பி, மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஓய்வு எடுத்து வந்தார்.

போர்களை முடிவுக்குக் கொண்டு வருவது, உலகில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என போப் பிரான்சிஸ் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். தன்னுடைய 22 வயதில் கிறிஸ்தவ சமுதாயத்துக்காக சேவையாற்றத் தொடங்கிய போப் பிரான்சிஸ், உடல்நிலை பாதிப்பு காரணமாக சிறு வயதிலேயே ஒரு நுரையீரலை இழந்தவர்.

கடந்த மார்ச் 13, 2013 - அன்று மழை பெய்த ஓர் இரவுக்குப் பிறகு, ஆர்ஜென்டினாவில் பிறந்த ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ என்ற பெயர்கொண்ட போப் பிரான்சிஸ், 2,000 ஆண்டுகள் பழமையான கத்தோலிக்க திருச்சபைக்கு, புத்துணர்ச்சியைக் கொண்டு வந்தவர்.

கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவாக இருந்த 16வது போப் பெனடிக்ட் எதிர்பாராதவிதமாக தனது பொறுப்பை ராஜிநாமா செய்த நிலையில், அப்பொறுப்புக்கு போப் பிரான்சிஸ் தேர்வ செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.