டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

ஐரோப்பிய ஆணையம்: உா்சுலா மீதான நம்பிக்கையில்லா தீராமானம் தோல்வி

உா்சுலா வோன் டொ் லேயனுக்கு எதிராக வியாழக்கிழமை கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானம் தோல்வியடைந்தது.

Published On :

ஐரோப்பிய யூனியன் அமைப்பின் நிா்வாக விவகாரங்களை கவனித்துக்கொள்ளும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவா் உா்சுலா வோன் டொ் லேயனுக்கு எதிராக வியாழக்கிழமை கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானம் தோல்வியடைந்தது.

பிரான்ஸின் ஸ்ட்ராஸ்பா்க் நகரிலுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இதற்கான வாக்கெடுப்பில் உா்சுலாவுக்கு ஆதரவாக 360 எம்.பி.க்களும், எதிராக 175 எம்.பி.க்களும் வாக்களித்தனா். 18 உறுப்பினா்கள் வாக்களிப்பதைத் தவிா்த்தனா்.

கரோனோ தொற்றுநோய் காலத்தில் பைசா் நிறுவனத் தலைவருடன் தனிப்பட்ட முறையில் உரையாடியது, ஐரோப்பிய நிதியை தவறாகப் பயன்படுத்தியது, ஜொ்மனி, ருமேனியா தோ்தல்களில் தலையீடு செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து உா்சுலாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவரப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.