ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அமெரிக்கா: இசைக் கச்சேரியால் வலிப்பு? 8 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

அமெரிக்காவில் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைப் பற்றி..

News image
அமெரிக்கா
Updated On :23 ஜூலை 2025, 1:24 pm

இணையதளச் செய்திப் பிரிவு

அமெரிக்காவின் தேவாலயத்தில் நடைபெற்ற இசைக் கச்சேரியில் பங்கேற்ற 8 குழந்தைகள், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹார்வர்டு பல்கலைக் கழகச் சதுக்கத்தில் உள்ள செயின்ட் பால்ஸ் தேவாலயத்தில், நேற்று (ஜூலை 22) இரவு, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இசைக்குழுவொன்று கச்சேரி நடத்தியுள்ளது.

இதையடுத்து, அங்கு ஒரு குழந்தை வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு மீட்புப் படை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, உடனடியாக அங்குச் சென்ற அதிகாரிகள் அந்தக் குழந்தைக்கு சிகிச்சை அளித்துள்ளனர். அப்போது, திடீரென, மேலும் 7 குழந்தைகளுக்கு வலிப்பு நோயின் அறிகுறிகள் தென்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த 8 குழந்தைகளும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

மேலும், அதிகாரிகள் அந்த தேவாலயம் முழுவதும் சோதனை மேற்கொண்டதில், காற்றில் எந்தவொரு அபாயகரமான பொருளும் கலக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, திடீரென குழந்தைகளின் உடல்நிலை பாதிக்கப்பட்டது குறித்து மர்மம் விலகாத நிலையில், அந்த இசைக் கச்சேரியில் கலந்துக் கொண்ட மற்ற 70-க்கும் மேற்பட்டோருக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

It is reported that 8 children who attended a music concert held at a church in the United States have suffered from seizures and are currently hospitalized.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.