விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

நைஜீரியா: நெடுஞ்சாலையில் 30 பேர் படுகொலை

நைஜீரிய நெடுஞ்சாலையில் பயணிகள் மீது ஆயுதக் குழுவினர் நடத்திய தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர்.

News image
நைஜீரியா: நெடுஞ்சாலையில் 30 பேர் படுகொலை
Updated On :11 மே 2025, 2:40 am

DIN

நைஜீரிய நெடுஞ்சாலையில் பயணிகள் மீது ஆயுதக் குழுவினர் நடத்திய தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர்.

இது குறித்து மனித உரிமைகள் அமைப்பான ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் சனிக்கிழமை தெரிவித்ததாவது:

நைஜீரியாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஒகிக்வே}ஓவேரி நெடுஞ்சாலை வழியாகச் சென்ற வாகனங்களின் மீது ஆயுதக் குழுவினர் தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 30 பேர் உயிரிழந்தனர்.

வியாழக்கிழமை நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 20}க்கும் மேற்பட்ட வாகனங்கள் மற்றும் லாரிகள் எரிக்கப்பட்டன என்று அந்த அமைப்பு தெரிவித்தது.

இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், இண்டிஜினஸ் பீப்பிள் ஆஃப் பியாஃப்ரா கிளர்ச்சி அமைப்பின் ஆயுதப் பிரிவான ஈஸ்டர்ன் செக்யூரிட்டி நெட்வொர்க் இந்த படுகொலைகளை நிகழ்த்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.