பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பலூசிஸ்தான் இனி பாகிஸ்தான் இல்லை: சுதந்திரம் பெற்றுவிட்டதாக அறிவிப்பு

பலூசிஸ்தான் இனி பாகிஸ்தான் இல்லை என்றும் சுதந்திரம் பெற்றுவிட்டதாகவும் அறிவிப்பு

News image
பலோசிஸ்தான்
Updated On :14 மே 2025, 12:38 pm

DIN

பாகிஸ்தானிடமிருந்து பலூசிஸ்தான் சுதந்திரம் பெற்றுவிட்டதாகவும், பலோசிஸ்தான் இனி பாகிஸ்தான் இல்லை எனவும் பலூச் அமைப்பின் தலைவர் மிர் யார் பலோச் அறிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், பலூசிஸ்தான் மக்கள் தங்கள் "தேசிய தீர்ப்பை" வழங்கியுள்ளனர் என்றும், உலகம் இனி அமைதியாக இருக்கக்கூடாது என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தானால் ஆக்ரமிக்கப்பட்ட பலூசிஸ்தான் மக்கள், சாலைகளில் திரண்டுள்ளனர். இது அவர்கள் வழங்கிய தேசிய தீர்ப்பு. இனி பலூசிஸ்தான், பாகிஸ்தான் கிடையாது. எனவே, உலகம், இனியும் வெறும் பார்வையாளராக அமைதியாக இருக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களும் இனி பலூசிஸ்தானை பாகிஸ்தான் என அழைக்க வேண்டாம் என்றும், பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரை மீட்க இந்தியாவுக்கு முழு ஆதரவு அளிப்போம் என்றும் பலூசிஸ்தானிலிருந்து வெளியேறுமாறு பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று உலக நாடுகளையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.