நேபாள நாட்டில் ஆளும் அரசுக்கு எதிராக எழுந்த மிகப்பெரிய போராட்டம் கலவரமாக வெடித்து, பிரதமர் ராஜிநாமா செய்த நிலையில், நாட்டின் முக்கிய விமான நிலையமான காத்மாண்டு விமான நிலையம் மூடப்பட்டது.
காத்மாண்டு விமான நிலையம் மூடப்பட்டிருப்பதால், ஏராளமான இந்திய விமானங்கள் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
நேபாளத்துக்கு இந்தியாவிலிருந்து புறப்பட வேண்டிய பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
காத்மாண்டு விமான நிலையத்துக்கு அருகே கலவரக்காரர்களால் தீவைக்கப்பட்ட கட்டடங்களிலிருந்து தீ பரவி வானம் முழுவதும் புகை மூட்டமாகக் காணப்படுவதால், விமானங்களின் புறப்பாடு மற்றும் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பல்வேறு உலக நாடுகளிலிருந்து நேபாளம் வந்த விமானங்கள் அண்டை நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது.
நேபாளத்தில் திங்கள்கிழமை இளைஞர்கள் நடத்திய தாக்குதலில் 19 பேர் பலியாகினர்.
தில்லியிலிருந்தும் மும்பையிலிருந்தும் சென்ற இண்டிகோ விமானங்கள், வெகு நேரம் தரையிறங்க அனுமதி கிடைக்காமல், லக்னௌ விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
நேபாளத்தில் சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து நடந்த போராட்டம், இன்று அரசுக்கு எதிரான போராட்டமாக மாறியது. பிரதரை பதவி விலகக் கோரி தொடர்ந்து போராட்டம் கலவரமாக வெடித்த நிலையில், சர்மா ஓலி தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
கலவரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், நேபாள நாடாளுமன்றத்துக்கும் பிரதமர் இல்லத்துக்கும் தீ வைத்ததால், அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. நேபாள பிரதமராக இருந்த சர்மா ஓலி, நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
Summary
Nepal is burning with unrest. In this situation, the airport has been closed.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நேபாளம்: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததில் 8 பேர் பலி

இந்தியாவுடனான உறவுக்கு மிகுந்த முன்னுரிமை: நேபாள வெளியுறவு அமைச்சா்

நேபாளம்: 2.12 லட்சம் கோடி ரூபாயில் நடப்பாண்டு பட்ஜெட் தாக்கல்
அரசியல் உள்நோக்கம் கொண்ட 1,500 நியமனங்கள் உடனடி ரத்து: நேபாள அரசு அவசர உத்தரவு
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



