அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!ராஜஸ்தானில் மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலி! கண்காணிப்பு தீவிரம்!தில்லிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாட மாட்டார்!தேர்தலுக்கிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர்: மத்திய அரசு மீது திருச்சி சிவா குற்றச்சாட்டுதமிழக தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி மாற்றம்!
/

பணியிடத்தில் ஆண்ட்டி என்றழைப்பது ஏற்புடையதல்ல: இந்திய செவிலியருக்கு ரூ. 1.75 லட்சம் நிவாரணம்!

இந்திய செவிலியரைப் பணியிடத்தில் ஆண்ட்டி என அழைத்த விவகாரம்: மான நஷ்ட வழக்கில் ரூ. 1.75 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவு

News image

செவிலியர் உருவப்படம் - Center-Center-Kochi

Updated On :8 ஏப்ரல் 2026, 1:22 pm

ஆண்ட்டி என அழைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட மான நஷ்ட வழக்கில் இந்திய செவிலியருக்கு ரூ. 1.75 லட்சம் நிவாரணம் வழங்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை பிரிட்டன் நீதிமன்றம் உறுதிசெய்தது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 61 வயதான இல்டா எஸ்டீவ்ஸ் பிரிட்டனில் அரசு சுகாதாரத்துறையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவருடன் பணிபுரியும் கானாவைப் பூர்வீகமாகக் கொண்ட சக செவிலியர் ஒருவர், இல்டாவின் வயதையும் இனத்தையும் சுட்டிக்காட்டி பல்வேறு தருணங்களில் அவர் மனதைப் புண்படுத்தும்படி ‘ஆண்ட்டி’ என அழைத்ததாகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. கடந்த இரண்டரையாண்டுகளுக்கு முன் நடைபெற்ற இவ்விவகாரத்தில், தான் பல முறை அவரிடம் அப்படி அழைக்கக்கூடாதென வலியுறுத்தியும் சக பணியாளர் அதைக் கேட்காமல் பணியிட மன துன்புறுத்தல் செயலில் ஈடுபட்டதாக இல்டா தெரிவித்தார்.

இதையடுத்து, அவர் மான நஷ்ட வழக்கொன்றை பிரிட்டன் நீதிம்ன்றத்தில்தொடுத்தார். கடந்தாண்டில் நடைபெற்ற அந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவில், சக பணியாளர் அவரை அப்படி அழைத்தது ஏற்புடையதல்ல என்பதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அதற்கான அபராதமாக பாதிக்கப்பட்ட இல்டாவுக்கு 1,425.15 பௌண்ட்ஸ் (ரூபாய் மதிப்பில் ரூ. 1.75 லட்சத்துக்கும் மேல்) வழங்க உத்தரவிட்டது.

இதை எதிர்த்து பிரிட்டன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், இப்போது அந்தத் தீர்ப்பை உறுதிசெய்துள்ளது பிரிட்டன் நீதிமன்றம்.

Summary

An Indian-origin healthcare assistant employed with the UK's National Health Service (NHS) has won a harassment claim over being called "auntie" by a nurse colleague of Ghanaian heritage.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.