ஊழலைக் குறைத்தாலே போதும்; மதுவிற்று வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை: அமைச்சர் விக்னேஷ்ஆன்லைனில் டாஸ்மாக் மதுபானத்தை முன்பதிவு மட்டுமே செய்ய முடியும்; வீடுகளுக்கு டெலிவரி கிடையாது: அமைச்சர் விக்னேஷ்வல்லுறவு வழக்கு! பத்திரிகையாளர் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டுகள் சிறை!அரசுப் பேருந்து பலகையில் தக்காளி வெற்றிக் கழகம்! என்னவானது? போக்குவரத்துக் கழகம் விளக்கம்விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்! அமைச்சர்விரைவில் பிளாஸ்டிக் ரூ.10, ரூ.20 தாள்கள்! புழக்கத்தில் இருக்கும் பணம் என்னவாகும்?நிலவில் மோதிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் பகுதி! அதிர்ச்சி விடியோ! எவ்வளவு பெரிய பள்ளம்?அடுத்த ஜென்மம் எதற்கு? இப்போதே விவசாயிகளுக்கு செய்யலாமே! பிரேமலதாதைரியம் இருந்தால் முதல்வர் வாயைத் திறக்கட்டும்! உதயநிதி சவால்! வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதல்வரின் உச்சிகுளிர பாராட்டு மழை: ஸ்டாலின்வளமான தமிழ்நாட்டை நோக்கிய நமது வெற்றிப் பயணம் தொடரட்டும்: முதல்வர் விஜய்உருப்படியாக எதுவுமில்லை! வேளாண் பட்ஜெட்டை விமர்சித்த உதயநிதி! அமைச்சர் ஆனந்துடன் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் அணி சந்திப்பு!கரூரில் தென்னை நாற்றுப்பண்ணை! பட்ஜெட்டில் தென்னை, பனை பாதுகாப்புத் திட்டங்கள்!வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்: எடப்பாடி பழனிசாமிதஞ்சாவூரில் நம்மாழ்வார் வேளாண் பாலிடெக்னிக் கல்லூரி! பட்ஜெட்டில் அறிவிப்பு!எல் நினோவால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம்! அமைச்சர் வினோத் உரைதமிழக வேளாண் பட்ஜெட்! வெற்றி விவசாய விருதுகள் அறிவிப்புஉயிர்ம உர விவசாயத்தில் சிறந்து விளங்குவோருக்கு நம்மாழ்வார் விருதுவிவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கு ரூ. 7,432 கோடி ஒதுக்கீடு!
/

ஈரானில் 21 இஸ்ரேலிய உளவாளிகள் கைது! மரண தண்டனை விதிப்பா?

ஈரானில் 21 இஸ்ரேலிய உளவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து...

News image

ஈரான் - பிரதிப் படம்

Updated On :6 ஆகஸ்ட் 2026, 5:38 pm IST

ஈரான் ராணுவம் குறித்த தகவல்களைச் சேகரித்த 21 இஸ்ரேலிய உளவாளிகள் கைது செய்யப்பட்டதாக, ஈரானிய அரசு அறிவித்துள்ளது.

ஈரானின் தென்கிழக்கு மாகாணமான கெர்மனில், இஸ்ரேலிய உளவுப்பிரிவான மொசாத் அமைப்பிற்காகச் செயல்பட்ட கூலிப்படையைச் சேர்ந்த 21 பேர் அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 21 பேரும் ஈரான் ராணுவம் குறித்த தகவல்களைச் சேகரித்து மொசாத் உளவாளிகளுக்கு அனுப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடைபெற்ற போர்களில், ஈரானிய கட்டமைப்புகள் குறித்த உளவாளிகளின் தகவலின் அடிப்படையில் இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் ஈரானின் முக்கிய ராணுவத் தளபதிகள், தலைவர்கள், விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர்.

இதனால், ஈரான் அரசு அந்நாட்டில் கைது செய்யப்படும் உளவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனையைக் கடுமையாக்கி உடனடியாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு வந்தது.

இருப்பினும், தற்போது கைது செய்யப்பட்டுள்ள இஸ்ரேலிய உளவாளிகளுக்கான தண்டனைக் குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

முன்னதாக, 2026 ஜனவரி முதல் ஈரானில் 52 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Iran has announced the arrest of 21 Israeli spies who gathered information on the Iranian military.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.