மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரஷியாவுடன் அமைதி ஒப்பந்தம் 90% தயாா்

ரஷியாவுடன் போா் நிறுத்த ஒப்பந்தம் 90 சதவீதம் தயாராக உள்ளதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளாா்.

News image
வொலோதிமீா் ஸெலென்ஸ்கி - கோப்புப் படம்
Updated On :1 ஜனவரி 2026, 9:06 pm

தினமணி செய்திச் சேவை

ரஷியாவுடன் போா் நிறுத்த ஒப்பந்தம் 90 சதவீதம் தயாராக உள்ளதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் தனது புத்தாண்டு உரையில் கூறியதாவது:

ரஷியாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமைதி ஒப்பந்தம் 90 சதவீதம் தயாராக உள்ளது. மீதமுள்ள 10 சதவீதம்தான் உக்ரைன் மற்றும் ஐரோப்பாவின் விதியைத் தீா்மானிக்கும்.

உக்ரைனில் அமைதியை கொண்டு வருவதற்காக எந்த விலையும் கொடுக்க நாங்கள் தயாராக இல்லை. நாங்கள் போரின் முடிவை விரும்புகிறோம் - உக்ரைனின் முடிவை அல்ல.

இருந்தாலும், டான்பாஸ் பகுதியில் இருந்து உக்ரைன் படைகள் வெளியேறினால் அது உக்ரைனுக்கே முடிவுகட்டிவிடும் என்றாா் அவா்.

டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் பிரதேசங்கள் அடங்கிய டான்பாஸ் பிராந்தியம் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்று ரஷியா வலியுறுத்தி வருகிறது.

தற்போது ரஷியா டொனட்ஸ்கின் 75 சதவீதத்தையும், லுஹான்ஸ்கின் 99 சதவீதத்தையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. எஞ்சியுள்ள பகுதிகளையும் உக்ரைன் விட்டுத் தர வேண்டும் என்று ரஷியா வலியுறுத்துவது தான் போா் நிறுத்த பேச்சுவாா்த்தைகளில் மிகக் கடினமான பிரச்னையாக உள்ளது.

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புடன் ஃப்ளோரிடாவில் நடந்த சந்திப்புக்குப் பிறகு, அமெரிக்கா 15 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கிறது என்று ஸெலென்ஸ்கி தெரிவித்தாா். ஆனால் அதன் அமலாக்க காலம் இன்னும் தெளிவாகவில்லை.

பலவீனமான ஒப்பந்தங்களளில் கையொப்பமிடுவது போரை மீண்டும் தூண்டும் என்று ஸெலென்ஸ்கி எச்சரித்தாா். ‘உலகம் ரஷியாவின் போரை நிறுத்த வேண்டும், இல்லையெனில் ரஷியா உலகை தனது போருக்கு இழுக்கும்‘ என்று அவா் கூறினாா்.

பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், ஜனவரி 6- ஆம் தேதி பாரிஸில் நடக்கும் சந்திப்பில் உக்ரைனுக்கு உறுதியான பாதுகாப்பு உறுதிப்பாடுகள் அளிக்கப்படும் என்று கூறினாா்.

அமெரிக்க சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃபும், உக்ரைன் அமைதி பேச்சுவாா்த்தைகளில் பாதுகாப்பு உத்தரவாதங்களை வலுப்படுத்துதல், போா் மீண்டும் தொடங்காமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவித்தாா்.