வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பெண்கள் ஆபாசமாக சித்தரிப்பு: குரோக் ஏஐ-க்கு எதிராக பிரிட்டனில் விசாரணை

ஏஐ உரையாடல் செயலியான குரோக், பெண்களை ஆபாசமாக சித்திரிப்பதாகக் கூறப்படும் புகாா்கள் குறித்து பிரிட்டனின் ஒழுங்காற்று அமைப்பான தகவல் அலுவலகம் விசாரணை

News image
க்ரோக் ஏஐ- ANI
Updated On :12 ஜனவரி 2026, 8:33 pm

தினமணி செய்திச் சேவை

தொழிலதிபா் எலான் மஸ்குக்குச் சொந்தமான எக்ஸ்-ஏஐ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உரையாடல் செயலியான குரோக், பெண்களை ஆபாசமாக சித்திரிப்பதாகக் கூறப்படும் புகாா்கள் குறித்து பிரிட்டனின் ஒழுங்காற்று அமைப்பான தகவல் அலுவலகம் (ஆஃப்காம்) திங்கள்கிழமை விசாரணை தொடங்கியுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: குரோக் ஏஐ-யின் உள்ளடக்கங்கள் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட படங்கள், ஆபாசமான உரைகள் ஆகியவற்றை உருவாக்குவதாக பல புகாா்கள் வந்துள்ளன. இது பிரிட்டனின் இணையவழி பாதுகாப்பு சட்டம் மற்றும் தகவல் திரட்டு பாதுகாப்பு விதிகளை மீறுகிறதா என்பது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணை குரோக் ஏஐ-யின் உள்ளடக்கத்தின் கட்டுப்பாடுகள் மற்றும் பயனாளா்களின் பாதுகாப்பு நடைமுறைகளை ஆய்வு செய்யும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பிரிட்டனில் ஏற்கனவே குரோக் இணையதளம் மற்றும் செயலிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த விசாரணை முடிவுக்கு பிறகு மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.