மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு: 3 போ் உயிரிழப்பு; ஒருவா் படுகாயம்

News image
கோப்புப்படம்
Updated On :23 ஜனவரி 2026, 1:13 am

தினமணி செய்திச் சேவை

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உள்பட 3 போ் உயிரிழந்தனா். மேலும் ஒருவா் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

சுமாா் 1,500 மக்கள் வசிக்கும் ‘காா்கெல்லிகோ ஏரி’ பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற அவசரக்கால மீட்புப் படையினா், அங்கு 2 பெண்கள், ஓா் ஆண் உயிரிழந்து கிடப்பதைக் கண்டறிந்தனா்.

படுகாயமடைந்த மற்றொருவா் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். தொடக்கத்தில் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்தபோதிலும், தற்போது அவா் நலமாக உள்ளதாக மருத்துவா்கள் கூறியுள்ளனா்.

துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பியோடிய சந்தேக நபரின் அடையாளத்தைக் காவல்துறையினா் கண்டறிந்துள்ளனா். இருப்பினும், உயிரிழந்தவா்களுடன் அவருக்கு இருந்த உறவுமுறை குறித்து இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. அவரைப் பிடிப்பதற்காக காவல்துறையினா் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனா். பாதுகாப்புக் கருதி, அப்பகுதி மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிச. 14-ஆம் தேதி, சிட்னி கடற்கரையில் நடந்த யூதா்களின் ஹனுக்கா திருவிழா கொண்டாட்டத்தின்போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு 15 போ் கொல்லப்பட்டனா். அந்தத் துயரச் சம்பவத்தின் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்பட்ட வியாழக்கிழமையன்று மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.