பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ரஷியாவின் போரில் சண்டையிட ஏமாற்றப்படும் வங்கதேச தொழிலாளர்கள்!

உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போரில் ஏமாற்றி களமிறக்கப்படும் வங்கதேச தொழிலாளர்கள் குறித்து...

News image

ரஷியா - உக்ரைன் போர் (கோப்புப் படம்) - ஏபி

Updated On :27 ஜனவரி 2026, 1:36 pm IST

ரஷியாவின் பொய்யான வாக்குறுதிகளால் ஈர்க்கப்படும் வங்கதேச தொழிலாளர்கள் உக்ரைனுக்கு எதிரான போரில் சண்டையிட களமிறக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு வேலைத் தேடி புலம்பெயர்ந்து வருகின்றனர். இதில், சட்டவிரோதமாக இந்தியா உள்ளிட்ட நாடுகளில் குடியேறியவர்கள் கைது செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருகின்றது.

இந்த நிலையில், நிரந்தர வேலை, அதிக ஊதியம், குடியேற்றம் உள்ளிட்ட தரகர்களின் பொய்யான வாக்குறுதிகளால் ஈர்க்கப்பட்டு மாஸ்கோவுக்கு அனுப்பப்படும் வங்கதேச தொழிலாளர்கள் கட்டாயத்தின் அடிப்படையில் சில ஆவணங்களில் கையெழுத்திட வைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, ரஷிய ராணுவ முகாம்களுக்கு வங்கதேச தொழிலாளர்கள் அனுப்பப்பட்டு அங்கு ஆயுதம், மருத்துவம், போர்க்களத்தில் காயமடைந்த வீரர்களை வெளியேற்றுவது உள்ளிட்ட கட்டாயப் பயிற்சிகள் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அங்கிருந்து தப்பித்து தாயகம் திரும்பிய சில வங்கதேச தொழிலாளர்கள் கூறுகையில்,

“ஆபத்தான சூழல்களில் போர்க்களத்தில் நாங்கள் களமிறக்கப்பட்டோம். ஆனால், ரஷிய வீரர்கள் எங்களுக்குப் பின்னால் பதுங்கிக் கொண்டனர். நாங்கள் அவர்கள் கூறும் வேலைகளைச் செய்ய மறுப்பு தெரிவித்ததற்கு ரஷிய அதிகாரிகள் எங்களைத் தாக்கினர். மேலும், 10 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுவோம் என அவர்கள் எங்களை மிரட்டினார்கள்” என்று கூறியுள்ளனர்.

இதுபோன்று ஏமாற்றப்பட்டு ரஷியாவின் போரில் சண்டையிட களமிறக்கப்பட்ட வங்கதேசத்தினரின் எண்ணிக்கைகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. மேலும், இந்த விவகாரம் குறித்து ரஷிய மற்றும் வங்கதேச அரசுகளும் இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை.

கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் உக்ரைன் மீதான ரஷியாவின் போரில் களமிறக்கப்படுவதற்கு இந்தியா, நேபாளம் மற்றும் வங்கதேசம் போன்ற நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் தொடர்ந்து குறிவைக்கப்படுவதாக, நிபுணர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

Summary

Bangladeshi workers, lured by Russia's false promises, are being deployed to fight in the war against Ukraine.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.