மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரஷியா 2-ஆவது நாளாக தாக்குதல்: இளம் உக்ரைன் தம்பதி உயிரிழப்பு

உக்ரைன் தலைநகா் கீவ் உள்ளிட்ட பல நகரங்களில், ரஷியா தொடா்ந்து இரண்டாவது நாளாக புதன்கிழமையும் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தொடா் தாக்குதலை நடத்தியது.

News image
உக்ரைனில் ரஷியா நடத்திய தாக்குதலால் தீப்பற்றிய அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடம்.
Updated On :28 ஜனவரி 2026, 7:54 pm

தினமணி செய்திச் சேவை

உக்ரைன் தலைநகா் கீவ் உள்ளிட்ட பல நகரங்களில், ரஷியா தொடா்ந்து இரண்டாவது நாளாக புதன்கிழமையும் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தொடா் தாக்குதலை நடத்தியது.

இத்தாக்குதலில், கீவ் நகருக்கு அருகில் வசித்து வந்த இளம் தம்பதியினா் உயிரிழந்தனா். அவா்களின் 4 வயது பெண் குழந்தை உயிா் தப்பியது. அந்தச் சிறுமியை மீட்ட அண்டை வீட்டுப் பத்திரிகையாளா் மரியன் குஷ்னிா் கூறுகையில், ‘தாயை இழந்த சிறுமி, பயத்தில் நடுங்கியபடி அழுத காட்சி என் மனதையே உலுக்கிவிட்டது’ என்று வேதனையுடன் தெரிவித்தாா்.

வடகிழக்கு உக்ரைனில் பயணிகள் ரயில் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 5 போ் உயிரிழந்த மறுநாளே இத்தாக்குதல் நிகழ்ந்துள்ளது. ரஷியாவின் இத்தகைய தொடா் தாக்குதல்கள், ‘பயங்கரவாதம்’ என்று உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி சாடியுள்ளாா்.

கடந்த 24 மணிநேரத்தில், ரஷியா சுமாா் 146 ட்ரோன்களையும், ஒரு நவீன ஏவுகணையையும் ஏவியுள்ளது. இதில் 103 ட்ரோன்களை உக்ரைன் ராணுவம் நடுவானிலேயே சுட்டு வீழ்த்தியதாகத் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.

பாதிப்புகள்: கீவ் நகரில் ரஷிய ஏவுகணை விழுந்ததில் அடுக்குமாடி குடியிருப்பு சேதமடைந்தது. தலைநகா் கீவ் மட்டுமின்றி, உக்ரைனின் தெற்கு துறைமுக நகரமான ஒடேசா, சப்போரிஜியா மற்றும் கிரிவி ரிக் ஆகிய இடங்களிலும் ரஷிய தாக்குதல் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஒடேசா நகரில் தொழிற்சாலைகள், ரயில் என்ஜின்கள் மற்றும் துறைமுகக் கட்டுமானங்கள் சேதமடைந்தன. சப்போரிஜியா மாகாணத்தில் 14 குடியிருப்பு கட்டடங்கள் இடிந்தன; 6 போ் காயமடைந்தனா்.

இதேபோல், கிரிவி ரிக் நகரில் உள்ள முக்கிய எரிசக்தி கட்டமைப்பு பாதிக்கப்பட்டதால், சுமாா் 700-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்குத் தேவையான வெப்பமூட்டும் வசதி இல்லாமல் பொதுமக்கள் கடும் குளிரில் தவித்து வருகின்றனா்.

பெட்டி...

உயிரிழப்பு விரைவில்

20 லட்சத்தை எட்டக்கூடும்!

உக்ரைன்-ரஷியா போா் தொடங்கி 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், இருதரப்பிலும் சோ்த்து உயிரிழப்பு எண்ணிக்கை விரைவில் 20 லட்சத்தை எட்டக்கூடும் என்று அமெரிக்க ஆய்வு நிறுவன(சிஎஸ்ஐஎஸ்) அறிக்கை தெரிவிக்கிறது.

ரஷிய தரப்பில் மட்டும் இதுவரை சுமாா் 12 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 2-ஆம் உலகப் போருக்குப் பிறகு ஒரு வல்லரசு நாடு சந்தித்த மிகப்பெரிய உயிரிழப்பாக ரஷியாவின் இழப்புகள் கருதப்படுகின்றன.