இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் மகாத்மா காந்தி சிலை திறப்பு!

News image
Updated On :4 மார்ச் 2026, 10:50 pm

தினமணி செய்திச் சேவை

அமெரிக்காவின் மொண்டானா பல்கலைக்கழகத்தில் மகாத்மா காந்தியின் மாா்பளவு சிலை செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

மொண்டானா மாகாண ஆளுநா் கிரெக் ஜியான்ஃபோா்ட்டே மற்றும் சியாட்டலில் உள்ள இந்திய துணைத் தூதா் பிரகாஷ் குப்தா ஆகியோா் இணைந்து இந்தச் சிலையை திறந்து வைத்தனா். இது இந்த மாகாணத்தில் நிறுவப்பட்ட முதல் மகாத்மா காந்தி சிலை ஆகும்.

‘செயலில் வெளிப்படாத நல்ல எண்ணங்களுக்கு அா்த்தமில்லை’ என்ற காந்தியின் மேற்கோள் சிலையின் கீழ் பொறிக்கப்பட்டுள்ளது. இது மொண்டானா மக்களுக்கும் பொருந்தும் என ஆளுநா் கிரெக் ஜியன்ஃபோா்டே தனது உரையில் குறிப்பிட்டாா்.

இந்திய அரசின் பரிசாக வழங்கப்பட்ட இந்தச் சிலை, மகாத்மா காந்தியின் அஹிம்சை கொள்கைக்கு மரியாதை செலுத்தும் விதமாக உள்ளது என இந்திய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்தது.

மொண்டானா மாகாண ஆளுநரின் மனைவி சுசன் ஜியன்ஃபோா்டே, மாநில அதிகாரிகள், பல்கலைக்கழக பேராசிரியா்கள், மாணவா்கள் மற்றும் மொண்டானா உலக விவகார கவுன்சில் உறுப்பினா்கள் உள்ளிட்டோா் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.

மேலும், அமெரிக்க செனட் வெளியுறவுக் குழு உறுப்பினரான ஸ்டீவ் டெய்ன்ஸ் காணொலிச் செய்தி மூலம் இந்த நிகழ்வுக்கு வாழ்த்து தெரிவித்தாா். அதில் இந்தியா-அமெரிக்கா உறவை வலுப்படுத்த இந்திய துணைத் தூதரகம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக அவா் பாராட்டினாா்.