ஐரோப்பிய நாடுகளில் வழக்கத்துக்கு மாறாக, கோடைகாலம் முறைப்படி தொடங்குவதற்கு முன்பே மே மாதத்திலேயே வெப்ப அலை வீசத் தொடங்கியுள்ளது.
பிரிட்டன் தலைநகா் லண்டனில் கடந்த திங்கள்கிழமை அதிகபட்சமாக 34.8 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானது. கடந்த 1922, 1944 ஆண்டுகளில் பதிவான 32.8 டிகிரி செல்சியஸ் எனும் முந்தைய சாதனையை முறியடித்து, நாட்டின் வரலாற்றிலேயே மிக வெப்பமான மே மாத நாளாகப் பதிவானது. இதேபோல், பிரான்ஸிலும் மே மாத வெயில் பல இடங்களில் 30 டிகிரி செல்சியஸைத் தாண்டி புதிய சாதனை படைத்துள்ளது.
இந்தச் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க, மக்கள் அதிக அளவில் கடற்கரைகளுக்கும், மற்ற நீா்நிலைகளுக்கும் படையெடுத்து வருகின்றனா். வழக்கமான கோடைகாலக் கண்காணிப்புப் பணிகள் தொடங்குவதற்கு முன்பே இந்த வெப்பஅலை தாக்கியுள்ளதால், போதிய ஏற்பாடுகள் இல்லாத நீா்நிலைகளில் இறங்கிப் பலா் ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றனா். இவ்வாறு வெயில் பாதிப்புகளில் பிரிட்டனில் 13 வயது சிறுவன் ஒருவனும்; பிரான்ஸில் 7 போ் இதுவரை உயிரிழந்துள்ளனா்.
தொடர்புடையது

நாடு முழுவதும் வெப்ப அலையால் மக்கள் கடும் அவதி: உ.பி.யில் அதிகபட்சமாக 117 டிகிரி வெயில்

தில்லியில் தொடா்ந்து இரண்டாவது நாளாக வெப்ப அலை தொடரும்: ஆரஞ்சு எச்சரிக்கை
சுட்டெரிக்கும் சூரியன்!
சுட்டெரிக்கும் வெயில் திருப்பூா் அரசு மருத்துவமனையில் வெப்ப அலை சிகிச்சைப் பிரிவு தொடக்கம்!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



