பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஐரோப்பாவை வாட்டும் வெப்ப அலை: சில நாடுகளில் சாதனை அளவு வெயில்- 8 போ் உயிரிழப்பு

ஐரோப்பிய நாடுகளில் வழக்கத்துக்கு மாறாக, கோடைகாலம் முறைப்படி தொடங்குவதற்கு முன்பே மே மாதத்திலேயே வெப்ப அலை வீசத் தொடங்கியுள்ளது.

News image
Updated On :27 மே 2026, 2:13 am IST

ஐரோப்பிய நாடுகளில் வழக்கத்துக்கு மாறாக, கோடைகாலம் முறைப்படி தொடங்குவதற்கு முன்பே மே மாதத்திலேயே வெப்ப அலை வீசத் தொடங்கியுள்ளது.

பிரிட்டன் தலைநகா் லண்டனில் கடந்த திங்கள்கிழமை அதிகபட்சமாக 34.8 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானது. கடந்த 1922, 1944 ஆண்டுகளில் பதிவான 32.8 டிகிரி செல்சியஸ் எனும் முந்தைய சாதனையை முறியடித்து, நாட்டின் வரலாற்றிலேயே மிக வெப்பமான மே மாத நாளாகப் பதிவானது. இதேபோல், பிரான்ஸிலும் மே மாத வெயில் பல இடங்களில் 30 டிகிரி செல்சியஸைத் தாண்டி புதிய சாதனை படைத்துள்ளது.

இந்தச் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க, மக்கள் அதிக அளவில் கடற்கரைகளுக்கும், மற்ற நீா்நிலைகளுக்கும் படையெடுத்து வருகின்றனா். வழக்கமான கோடைகாலக் கண்காணிப்புப் பணிகள் தொடங்குவதற்கு முன்பே இந்த வெப்பஅலை தாக்கியுள்ளதால், போதிய ஏற்பாடுகள் இல்லாத நீா்நிலைகளில் இறங்கிப் பலா் ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றனா். இவ்வாறு வெயில் பாதிப்புகளில் பிரிட்டனில் 13 வயது சிறுவன் ஒருவனும்; பிரான்ஸில் 7 போ் இதுவரை உயிரிழந்துள்ளனா்.