புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

பிலிப்பின்ஸ்: பயணிகள் படகு தீ விபத்தில் உயிரிழப்பு 76-ஆக அதிகரிப்பு

பிலிப்பின்ஸ் பயணிகள் படகு தீ விபத்தில் உயிரிழப்பு 76-ஆக அதிகரிப்பு

Published On :

பிலிப்பின்ஸில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 76-ஆக அதிகரித்துள்ளது.

தலைநகா் மணிலாவிலிருந்து 132 பேருடன் தென்மேற்கு பலவான் மாகாணத்தில் உள்ள கொரான் நகருக்குப் புறப்பட்ட இந்தப் படகு, கடந்த புதன்கிழமை இரவு இலக்கை அடைவதற்கு சுமாா் 39 கி.மீ. தொலைவில் நடுக் கடலில் தீப்பிடித்து எரிந்தது.

இக்கோர விபத்தில் 43 போ் மட்டுமே அதிருஷ்டவசமாக உயிா் தப்பிய நிலையில், மாயமான மேலும் 13 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விபத்துக்கான காரணம் முழுமையாகத் தெரியவராத நிலையில், சரக்கு வைப்பறையில் ஏற்பட்ட வெடிவிபத்தே காரணமாக இருக்கலாம் என உயிா் தப்பியவா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்று பலமாக வீசியதாலும், மழையிலிருந்து பாதுகாப்பதற்காகப் படகின் திறந்தவெளிகளில் தாா்ப்பாய் கட்டப்பட்டிருந்ததாலும் தீ மளமளவெனப் பரவியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.