தென்மேற்கு ரயில்வேயில் முன்னாள் ரயில்வே ஊழியர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.
இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தென்மேற்கு ரயில்வே-பெங்களூரு மண்டலத்தில் பல்வேறு பணிகளில் மீண்டும் வேலை செய்ய 62 வயதுக்குள்பட்ட முன்னாள் ரயில்வே ஊழியர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. மாத ஊதியத்தின் அடிப்படையில் வேலைசெய்ய உடல் தகுதியுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக மண்டல ரயில்வே அலுவலகத்தையோ, www.swr.indianrailways.gov.in என்ற இணையதளத்திலோ விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.