மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மும்பை புறநகர்ப் பகுதியில் உள்ள நான்கு இடங்களில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் அதிரடி சோதனை நடத்தியதாக அதிகாரி ஒருவர் செவ்வாக்கிழமை தெரிவித்துள்ளார்.
உளவுத்துறையினர் கொடுத்தத் தகவலின் அடிப்படையில், பயங்கரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகள் புறநகரின் கிழக்குப் பகுதியான குர்லாவிலும், கோவண்டியின் மூன்று இடங்களிலும், தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர்.
சந்தேகத்திற்குரிய நான்கு பேர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அவர்கள் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட, சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் தடுப்பு சட்டத்தின் கீழுள்ள பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
இந்தக் குற்றச்சாட்டில் தொடர்புடையவர்களிடமிருந்து உரிய ஆதாரங்களைத் திரட்டி வருவதாகவும், இது தொடர்பாக உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அனைத்து பக்கமும் திரையரங்கங்கள் தெறிக்கின்றன: ஆர்ஜே பாலாஜி

கருப்புக்கு வரவேற்பு... உற்சாக மிகுதியில் கத்திய ஆர்ஜே பாலாஜி!

பயங்கரவாத குழுக்களை பாகிஸ்தான் ஒடுக்க வேண்டும்: அமெரிக்க எம்.பி. பிராட் ஷொ்மன்

பாகிஸ்தானின் பயங்கரவாத செயல்கள்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் காட்சிப்படுத்தும் இந்தியா!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



