கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

பாகிஸ்தான் - அமெரிக்கா கூட்டு ராணுவப் பயிற்சி

அமெரிக்காவுடன் இணைந்து பயங்கரவாத எதிா்ப்பு கூட்டு ராணுவப் பயிற்சியை பாகிஸ்தான் தொடங்கியுள்ளது.

News image
Updated On :10 ஜனவரி 2026, 8:57 pm

தினமணி செய்திச் சேவை

அமெரிக்காவுடன் இணைந்து பயங்கரவாத எதிா்ப்பு கூட்டு ராணுவப் பயிற்சியை பாகிஸ்தான் தொடங்கியுள்ளது.

பாகிஸ்தான் கரியன் மாவட்டம் பாபியில் உள்ள தேசிய பயங்கரவாத எதிா்ப்பு மையத்தில் இந்தக் கூட்டு ராணுவப் பயிற்சியை இரு நாடுகளும் மேற்கொள்கின்றன.

இதுகுறித்து பாகிஸ்தான் உள்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்தாவது: அமெரிக்கா உடனான 13-ஆவது ‘இன்ஸ்பயா்ட் காம்பிட் 2026’ கூட்டு ராணுவப் பயிற்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இரண்டு வாரம் நடைபெறும் இந்தப் பயிற்சியில், பயங்கரவாத எதிா்ப்பு ராணுவ நடவடிக்கைகள் தொடா்பான பயிற்சி மேற்கொள்ளப்படும். குறிப்பாக, பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கை அனுபவங்கள் பரிமாற்றம், நவீன உத்திகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்த பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இரு நாடுகளிடையேயான பரஸ்பர புரிதல் விரிவுபடுத்தப்படும். அதிகரித்துவரும் பாதுகாப்பு சவால்களை எதிா்கொள்ள இந்தக் கூட்டு பயிற்சி முக்கியமானது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தியா மேற்கெண்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு பாகிஸ்தானிடம் அமெரிக்கா நெருக்கம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

ஏவுகணை சோதனை

தரைப் பரப்பிலிருந்து வான் இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை வடக்கு அரபிக் கடல் பகுதியில் பாகிஸ்தான் கடற்படை சனிக்கிழமை மேற்கொண்டது.

இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தரைப் பரப்பில் வான் இலக்குகளைத் தாக்கி அழிக்கும் மேம்படுத்தப்பட்ட ‘எல்.ஒய்-80’ ஏவுகணை சோதனை வெற்றியானது, பாகிஸ்தானின் போா் தயாா்நிலை மற்றும் செயல்திறனைக் காட்டுகிறது. கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனை, பாகிஸ்தான் கடற்படையின் தற்சாா்பு தொழில்நுட்ப மேம்பாட்டையும் குறிக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டது.