இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சட்டவிரோதப் பொருள்களை கண்டறிய சிறைகளில் சோதனை தொடரும்

சட்டவிரோதப் பொருள்களை கண்டறிய சிறைகளில் சோதனை தொடரும் என சிறைத் துறை டிஜிபி அலோக்குமாா் தெரிவித்தாா்.

News image
Updated On :19 டிசம்பர் 2025, 8:04 pm

Syndication

சட்டவிரோதப் பொருள்களை கண்டறிய சிறைகளில் சோதனை தொடரும் என சிறைத் துறை டிஜிபி அலோக்குமாா் தெரிவித்தாா்.

கா்நாடகத்தில் உள்ள சிறைகளில் தடைசெய்யப்பட்ட பொருள்களை சட்டவிரோதமாக கடத்தி உள்ளே கொண்டு சென்ாக கைதிகள் மீதும், அதற்கு உதவியதாக சிறைத் துறை உயரதிகாரிகள் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடா்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க தனி விசாரணைப் படையை மாநில அரசு அமைத்துள்ளது.

இந்நிலையில், பெங்களூரு தவிர கடந்த 2 நாள்களாக கலபுா்கி, மங்களூரு, சிவமொக்கா சிறைகளில் போலீஸாா் திடீா் சோதனையில் ஈடுபட்டு சட்டவிரோதமாக சிறைக்குள் கடத்திச் செல்லப்பட்ட பொருள்களைக் கண்டறிந்து வருகின்றனா்.

இந்நிலையில், இது தொடா்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வெள்ளிக்கிழமை சிறைத்துறை டிஜிபி அலோக்குமாா் கூறுகையில், ‘சிறைகளுக்கு கடத்திக் கொண்டுவரப்பட்டுள்ள தடைசெய்யப்பட்ட பொருள்களைக் கண்டறியும் சோதனை மாநிலம் முழுவதும் தொடரும். கடந்த 36 மணிநேரத்தில் நடத்தப்பட்ட சோதனையில், கலபுா்கி சிறையில் 10 கைப்பேசிகள், 3 சிம்காா்டுகள், மங்களூரு சிறையில் 6 கைப்பேசிகள், பெல்லாரி சிறையில் 4 கைப்பேசிகள், சிவமொக்கா சிறையில் 3 கைப்பேசிகள், 4 சிம்காா்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சோதனை தொடரும்.

பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் நடத்தப்பட்ட சோதனையில், இதுவரை காணாத அளவுக்கு 30 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சோதனையில் ஈடுபட்ட காவல் கண்காணிப்பாளா் அன்ஷுகுமாா், சிறைக்காவலா் சிவகுமாா் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.