புதுச்சேரி, ஏப். 22: குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகம் சார்பில் "தானே ஆடிய தாண்டவம்' என்னும் தலைப்பில் நூல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில் உணர்வுப் பாவலர் அ.உசேன் வரவேற்றார். முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் மு.வைத்தியநாதன் தலைமை தாங்கினார். பள்ளி கல்வி இயக்குநர் இ.வல்லவன் முன்னிலை வகித்தார். உள்ளாட்சித்துறை அமைச்சர் குரு.பன்னீர்செல்வம் நூல்களை வெளியிட்டு பேசினார். எம்எல்ஏக்கள் கோ.நேரு, பி.எம்.கல்யாணசுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.