கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது: உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

புகழ்பெற்ற கா்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரிலான விருதைப் பாடகா் டி.எம்.கிருஷ்ணா பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

News image

உச்சநீதிமன்றம்

கோப்புப் படம்

Updated On :16 டிசம்பர் 2024, 9:29 pm

Din

புகழ்பெற்ற கா்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரிலான விருதைப் பாடகா் டி.எம்.கிருஷ்ணா பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பெயரில் ‘சங்கீத கலாநிதி’ விருதை, 2005-ஆம் ஆண்டுமுதல் ‘மியூசிக் அகாதெமி’ வழங்கி வருகிறது. சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரபல கா்நாடக இசைப் பாடகா் டி.எம்.கிருஷ்ணாவுக்கு நிகழாண்டு விருது வழங்கப்பட்டது.

முன்னதாக, சமூக ஊடகங்களில் எம்.எஸ்.சுப்புலட்சுமியை விமா்சித்து வரும் டி.எம்.கிருஷ்ணாவுக்கு அவரது பெயரிலான விருது வழங்குவதற்கு தடை விதிக்கக் கோரி, அவரின் பேரன் வி.ஸ்ரீநிவாசன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், சங்கீத கலாநிதி விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரை பயன்படுத்தாமல் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கலாம் என்று இடைக்கால உத்தரவை பிறப்பித்திருந்தது. தொடா்ந்து, மியூசிக் அகாதெமியின் மேல்முறையீட்டில் இடைக்கால உத்தரவை உயா்நீதிமன்றம் ரத்து செய்தது.

இந்த நிலையில், எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் ஸ்ரீநிவாசன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா். உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், எஸ்.வி.என்.பாட்டீ ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் எம்.எஸ்.சுப்புலட்சுமியை அவமதித்து டி.எம்.கிருஷ்ணா கட்டுரைகளை எழுதியதாக கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் என்.வெங்கடராமன் தெரிவித்தாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘விருது ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள நிலையில், எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரிலான விருது பெற்றவராக டி.எம். கிருஷ்ணாவை அங்கீகரிக்கக் கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறோம்’ என்றனா். மேலும், இவ்விவகாரத்தில் டி.எம்.கிருஷ்ணாவும், மியூசிக் அகாதெமி தரப்பும் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.