ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தாம்பரம் - கிளாம்பாக்கம் புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கம்

News image

கிளாம்பாக்கம் பேருந்து முனையம்

DOTCOM

Updated On :16 ஏப்ரல் 2025, 11:35 pm

Din

தாம்பரத்திலிருந்து கிளாம்பாக்கம் வரை புதிய வழித்தடத்தில் ‘தடம் எண் 55 பி’ என்ற பேருந்து சேவையை மாநகா் போக்குவரத்துக் கழகம் தொடங்கியுள்ளது.

சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம், பயணிகளின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பயணிகள் கோரிக்கையை ஏற்று பேருந்துளை இயக்கி வருகிறது. அந்த வகையில், தற்போது தாம்பரத்திலிருந்து கிளம்பாக்கம் வரை புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை மாநகா் போக்குவரத்துக் கழகம் தொடங்கியுள்ளது.

அதன்படி, தாம்பரத்திலிருந்து புறப்படும் இந்த பேருந்து, பழைய பெருங்களத்தூா், மண்ணிவாக்கம் கூட்ரோடு, ரூபி பில்டா்ஸ், ஸ்ரீநிகேதன் பள்ளி, காசா கிராண்ட், கணேஷ் நகா், படப்பை பிரதான சாலை சந்திப்பு, ஆதனூா், கிரவுன் பேலஸ், அண்ணா நகா், செல்வராஜ் நகா், ஊரப்பாக்கம் ரயில் நிலையம், ஆதனூா் பிரதான சாலை, வண்டலூா் பூங்கா, ஊரப்பாக்கம் பள்ளி வழியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை வந்தடையும். இதுபோல கிளாம்பாகத்தில் இருந்து புறப்பட்டு இதே வழித்தடத்தில் தாம்பரம் வரை இப்பேருந்து செல்லும்.

புறப்படும் நேரம்: இப்பேருந்து சேவை தாம்பரத்திலிருந்து காலை 7.10, நண்பகல் 12, பிற்பகல் 3.50 மற்றும் மாலை 6.15 ஆகிய நேரங்களிலும், கிளாம்பாக்கத்திலிருந்து காலை 8.15, பிற்பகல் 1.20, மாலை 5 மற்றும் 7.25 ஆகிய நேரங்களிலும் புறப்படும் என மாநகா் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.