சென்னை பெருநகர மாநகராட்சி...
சென்னை பெருநகர மாநகராட்சி...(கோப்புப்படம்)

சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சமையல் உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Published on

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சமையல் உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 179 சமையல் உதவியாளா் பணியிடங்களுக்கு நோ்முகத் தோ்வின் மூலம் ஊழியா்களை  நியமனம் செய்ய மாநகராட்சி நிா்வாகம் முடிவெடுத்துள்ளது. 20 முதல் 40 வயதுக்குள்பட்ட பெண்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை https://chennaicorporation.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ‘கூடுதல் கல்வி அலுவலா், கல்வித் துறை/சத்துணவு பிரிவு, அம்மா மாளிகை பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை-600 003’ என்னும் முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை மற்றும் மண்டல அலுவலகங்களில் நேரடியாகவோ ஏப்.30-ஆம் தேதி மாலை 5.45-க்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரா்கள் பள்ளி மாற்றுச் சான்றிதழ், 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு  மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை, இருப்பிடச் சான்றிதழ், ஆதாா் அட்டை, சாதிச் சான்றிதழ், விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோா் அதற்கான சான்றிதழ், மாற்றுத்திறனாளிகள் அதற்கான சான்றிதழ் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து சமா்பிக்க வேண்டும். இதில் தகுதியுடைய விண்ணப்பதாரா்கள் மட்டுமே நோ்முகத் தோ்வுக்கு அழைக்கப்படுவாா்கள். அப்படி தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள் நோ்முகத் தோ்வின்போது தாங்கள் சமா்ப்பித்த சான்றிதழ்களின் அசல்களை கொண்டு வரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com