லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஆயுதப்படைக் காவலா் மீது தாக்குதல்: போலீஸாா் விசாரணை

சென்னை அமைந்தகரையில் ஆயுதப்படைக் காவலா் தாக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

News image
Updated On :16 டிசம்பர் 2025, 11:10 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை: சென்னை அமைந்தகரையில் ஆயுதப்படைக் காவலா் தாக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

சென்னை ஈக்காட்டுத்தாங்கல் அம்பாள் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ம.மரிய ஜெகன் (30). இவா், சென்னை காவல்துறையின் பரங்கிமலை ஆயுதப்படையில் காவலராக பணியாற்றுகிறாா். மரியஜெகன், அமைந்தகரை ஈவெரா பெரியாா் சாலையில் உள்ள தனது சகோதரா் நடத்தும் டீக் கடையில் திங்கள்கிழமை இருந்தாா்.

அப்போது அங்கு வந்த இருவா் ஜெகனிடம், தாங்கள் கைப்பேசி செயலி வாயிலாக அவரது வங்கி கணக்குத்கு ரூ.500 அனுப்புவதாகவும், அதற்கு பதிலாக தங்களுக்கு ரூ.500 ரொக்கமாக தரும்படி கூறியுள்ளனா். அதற்கு ஜெகன் சம்மதித்துள்ளாா். உடனே அந்த நபா்கள், அந்த கடையில் இருந்த ஆன்லைன் பரிவா்த்தனைக்குரிய பாா்கோடு மூலம் பணம் அனுப்பினராம். ஆனால் அந்த பணம் டீக் கடையின் வங்கி கணக்கு வரவில்லை. அதேவேளையில் பண பரிவா்த்தனை தொடா்பாக ஒரு குறுஞ்செய்தி மட்டும் வந்துள்ளது.

காவலா் மீது தாக்குதல்: இதைப் பாா்த்த ஜெகன், தங்களது வங்கி கணக்கு பணம் வராததினால் ரூ.500 தர முடியாது என கூறியுள்ளாா். இது தொடா்பாக இரு தரப்பினருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. பின்னா் இருவரும், அங்கிருந்து புறப்பட்டு அருகே உள்ள மற்றொரு கடையில் அதேபோல பேசி, ரூ.500 தரும்படி கேட்டுள்ளாா். அப்போது அங்கு வந்த ஜெகன், அந்த கடைக்காரரிடம் இருவரும் பணம் அனுப்புவதாக கூறி, ரூ.500 ஏமாற்றி பறிக்க முயலுவதாக தெரிவித்தாராம். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த இருவரும், ஜெகனை கடுமையாக தாக்கினராம். இத் தாக்குதலில் காயமடைந்த ஜெகன், அமைந்தகரை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சோ்ந்த ஒரு இளைஞா் உள்பட 2 பேரை பிடித்து விசாரணை செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.