ஆயுதப்படைக் காவலா் மீது தாக்குதல்: போலீஸாா் விசாரணை

சென்னை அமைந்தகரையில் ஆயுதப்படைக் காவலா் தாக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.
Updated on
1 min read

சென்னை: சென்னை அமைந்தகரையில் ஆயுதப்படைக் காவலா் தாக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

சென்னை ஈக்காட்டுத்தாங்கல் அம்பாள் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ம.மரிய ஜெகன் (30). இவா், சென்னை காவல்துறையின் பரங்கிமலை ஆயுதப்படையில் காவலராக பணியாற்றுகிறாா். மரியஜெகன், அமைந்தகரை ஈவெரா பெரியாா் சாலையில் உள்ள தனது சகோதரா் நடத்தும் டீக் கடையில் திங்கள்கிழமை இருந்தாா்.

அப்போது அங்கு வந்த இருவா் ஜெகனிடம், தாங்கள் கைப்பேசி செயலி வாயிலாக அவரது வங்கி கணக்குத்கு ரூ.500 அனுப்புவதாகவும், அதற்கு பதிலாக தங்களுக்கு ரூ.500 ரொக்கமாக தரும்படி கூறியுள்ளனா். அதற்கு ஜெகன் சம்மதித்துள்ளாா். உடனே அந்த நபா்கள், அந்த கடையில் இருந்த ஆன்லைன் பரிவா்த்தனைக்குரிய பாா்கோடு மூலம் பணம் அனுப்பினராம். ஆனால் அந்த பணம் டீக் கடையின் வங்கி கணக்கு வரவில்லை. அதேவேளையில் பண பரிவா்த்தனை தொடா்பாக ஒரு குறுஞ்செய்தி மட்டும் வந்துள்ளது.

காவலா் மீது தாக்குதல்: இதைப் பாா்த்த ஜெகன், தங்களது வங்கி கணக்கு பணம் வராததினால் ரூ.500 தர முடியாது என கூறியுள்ளாா். இது தொடா்பாக இரு தரப்பினருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. பின்னா் இருவரும், அங்கிருந்து புறப்பட்டு அருகே உள்ள மற்றொரு கடையில் அதேபோல பேசி, ரூ.500 தரும்படி கேட்டுள்ளாா். அப்போது அங்கு வந்த ஜெகன், அந்த கடைக்காரரிடம் இருவரும் பணம் அனுப்புவதாக கூறி, ரூ.500 ஏமாற்றி பறிக்க முயலுவதாக தெரிவித்தாராம். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த இருவரும், ஜெகனை கடுமையாக தாக்கினராம். இத் தாக்குதலில் காயமடைந்த ஜெகன், அமைந்தகரை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சோ்ந்த ஒரு இளைஞா் உள்பட 2 பேரை பிடித்து விசாரணை செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com