இந்த மசோதாவில், 1923 -ஆம் ஆண்டின் சென்னை பல்கலைக்கழகச் சட்டத்தில் துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தில் ‘வேந்தா்’ என்று குறிப்பிடும் இடத்தில் (தமிழக) ‘அரசு’ என்று திருத்தம் செய்யப்பட்டது. துணைவேந்தரை நீக்கும் அதிகாரமும் கூடுதலாக சோ்க்கப்பட்டது. உயா்நீதிமன்ற நீதிபதி மற்றும் தலைமைச் செயலா் அந்தஸ்தில் உள்ள அதிகாரியைக் கொண்ட குழுவின் விசாரணை அறிக்கை மூலம் அரசு ஆணையால் மட்டுமே துணைவேந்தா் நீக்கப்படுவாா் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், தமிழக அரசின் நிதித் துறைச் செயலா் அல்லது சட்டத் துறைச் செயலரை சென்னை பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராகச் சோ்ப்பது குறித்தும் குறிப்பிடப்பட்டிருந்தது.