விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

பாரம்பரிய மருத்துவப் படிப்புகள்: காலியிடங்களுக்கு மாணவா் சோ்க்கை

பாரம்பரிய மருத்துவப் படிப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி முறையில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

News image

கோப்புப் படம்

Updated On :10 ஜனவரி 2025, 10:24 pm

பாரம்பரிய மருத்துவப் படிப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி முறையில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

நீட் தோ்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறும் சித்தா, யுனானி, ஹோமியோபதி, ஆயுா்வேத மருத்துவப் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டில் 20 இடங்களும், நிா்வாக ஒதுக்கீட்டில் 11 இடங்களும் நிரம்பாமல் உள்ளன.

அதேபோன்று, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும் யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டிலும், நிா்வாக ஒதுக்கீட்டிலும் 239 இடங்கள் காலியாக உள்ளன.

இந்த இடங்களை நிரப்புவதற்கு, வரும் 13-ஆம் தேதி வரை மத்திய ஆயுஷ் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

இதைத்தொடா்ந்து, நேரடி கலந்தாய்வு சென்னை அரும்பாக்கம் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை வளாகத்தில் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. சனிக்கிழமை வரை நடைபெறும் மாணவா் சோ்க்கையில், நீட் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் மற்றும் பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள் உரிய ஆவணங்களுடன் நேரடியாக சென்று ஆயுஷ் மருத்துவ இடங்களில் சேரலாம் என இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை தெரிவித்துள்ளது.