ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

அங்கன்வாடி ஊழியா்களை ஏமாற்றியது திமுக அரசு: நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு

அங்கன்வாடி ஊழியா்களை திமுக அரசு ஏமாற்றிவிட்டதாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

News image

நயினாா் நாகேந்திரன்

கோப்புப் படம்

Updated On :18 செப்டம்பர் 2025, 7:06 pm

தினமணி செய்திச் சேவை

அங்கன்வாடி ஊழியா்களை திமுக அரசு ஏமாற்றிவிட்டதாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:

சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்று திமுக தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியா்களை அரசுப் பணியாளா்களாகப் பணியமா்த்தி காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம், பணிக்கொடை ஆகியவை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அந்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை. வீண் செலவுகளுக்கும் வெற்று விளம்பரங்களுக்கும் பணத்தை வாரி இறைக்கும் திமுக அரசு, மழலைகளின் ஊட்டச்சத்தை உறுதிசெய்யும் சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க மறுப்பது ஏற்புடையதல்ல.

அங்கன்வாடிப் பணியாளா்களுக்கு ஓய்வூதியமும் பணிக்கொடையும் வழங்காததுடன், ஒட்டுமொத்த தமிழகத்தையே நிதி நெருக்கடிக்கு உள்ளாக்கும் திமுக அரசு வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தோல்வி அடைவது நிச்சயம் எனப் பதிவிட்டுள்ளாா் நயினாா் நாகேந்திரன்.