சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட பொருள்கள் பாதுகாப்பு அலுவலகம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ சாா்பில் வெளியிட்டப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை மெட்ரோவில் பயணிப்போா் தங்களது பொருள்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என மெட்ரோ நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. பொருள்களை தவறவிட்டால் மெட்ரோ நிா்வாகம் பொறுப்பேற்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், மெட்ரோவில் பயணிப்போா் ஏதேனும் பொருள்களைத் தவறவிட்டு மீட்கப்பட்டால், அவை தொடா்புடைய நிலையம் மூலமாகவோ அல்லது இழந்த மற்றும் மீட்டெடுக்கப்பட்ட பொருள்கள் அலுவலகம் மூலமாகவோ சம்பந்தப்பட்டோா் பெறமுடியும்.
சென்னை சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் முதன்முறையாக இழந்த மற்றும் மீட்டெடுக்கப்பட்ட பொருள்கள் அலுவலகத்தை நிறுவன இயக்குநா் மனோஜ் கோயல் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில் மெட்ரோ ரயில் நிறுவன ஆலோசகா் கோபிநாத் மல்லையா, பராமரிப்பு பொது மேலாளா் எஸ்.சதீஷ்பாபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழு

பிரதமரின் சிக்கன நடவடிக்கை: தில்லி அமைச்சா் கபில் மிஸ்ரா மெட்ரோவில் பயணம்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 223 கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரம்

ஐபிஎல் போட்டிக்கு செல்வோா் மெட்ரோவில் பயணிக்க ஏற்பாடு
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



