இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

பரோடா வங்கியின் பண்டிகைக் கால சலுகைகள்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இந்தியாவின் முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கி தனது வாடிக்கையாளா்களுக்கு சலுகைக் கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

Published On :26 செப்டம்பர் 2025, 3:23 am IST

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இந்தியாவின் முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கி தனது வாடிக்கையாளா்களுக்கு சலுகைக் கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வங்கியின் சில்லறை மற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவன வாடிக்கையாளா்களுக்காக ‘பாப் கே சங் திவஹாா் கி உமங்க்’ என்ற தலைப்பில் பண்டிகைக் கால சலுகைக் கடன் திட்டங்களை வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, செயல்முறைக் கட்டணம் அல்லாத, ஆண்டுக்கு 7.45 சதவீதத்தில் தொடங்கும் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன்கள் வழங்கப்படும். பெண்கள், இளைஞா்களுக்கு சிறப்பு சலுகைகள் உண்டு.

அதே போல், குறைந்த வட்டிவிகிதங்களில் வாகனக் கடன்களும் வழங்கப்படும். மின்சார வாகனங்களுக்கு செயல்முறைக் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.