மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிஐஎஸ்எஃப்-இன் வந்தே மாதரம் கடலோர மிதிவண்டி பயணம் ஜன.28-இல் தொடக்கம்

மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் (சிஐஎஸ்எஃப்) ‘வந்தே மாதரம் மிதிவண்டி பயணம்’ வரும் ஜன.28-இல் தொடங்கி, பிப்.22-ஆம் தேதி வரை நடைபெறும்

News image
சென்னையில் செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை பேட்டியளித்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் தென்மண்டல ஐஜி எஸ்.ஆா்.சரவணன். உடன், டிஐஜி ஆா். பொன்னி.
Updated On :19 ஜனவரி 2026, 10:13 pm

தினமணி செய்திச் சேவை

திருவொற்றியூா்: மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் (சிஐஎஸ்எஃப்) ‘வந்தே மாதரம் மிதிவண்டி பயணம்’ வரும் ஜன.28-இல் தொடங்கி, பிப்.22-ஆம் தேதி வரை நடைபெறும் என சிஐஎஸ்எஃப் தெற்கு பிராந்திய ஐ.ஜி எஸ்.ஆா்.சரவணன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

நாடு முழுவதும் அமைந்துள்ள பெருந்துறைமுகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான நிறுவனங்களின் பாதுகாப்புப் பணிகளில் சுமாா் 2.20 லட்சம் தொழில் பாதுகாப்பு படையினா் ஈடுபடுகின்றனா். கடந்த ஆண்டு கடலோர மிதிவண்டி பயணத்தை சிஐஎஸ்எஃப் தொடங்கியது. நிகழாண்டு வந்தே மாதரம் பாடலின் 150-ஆவது ஆண்டைக் கொண்டாடும் வகையில், கடலோர மிதிவண்டி பயணத்துக்கு ஏற்பாடு செய்யபட்டுள்ளது. ‘பாதுகாப்பான கடற்கரை, வளமான இந்தியா’ என்ற கருப்பொருளை முன்னிறுத்தி இந்தப் பயணம் மேற்கொள்ளப்படும். போதைப் பொருள்கள், ஆயுதங்கள், வெடிபொருள்கள் கடத்தல் உள்ளிட்ட கடலோரப் பாதுகாப்பு சவால்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துவதுதான் மிதிவண்டி பயணத்தின் முக்கிய நோக்கங்கள் ஆகும்.

25 நாள்களில் 6,500 கி.மீ. பயணம்: குஜராத் மாநிலம் லக்பத், மேற்கு வங்க மாநிலம் பக்காலி ஆகிய 2 இடங்களிலிருந்து 2 குழுவினராக, வரும் ஜன.28-இல் கடலோர மிதிவண்டி பயணம் தொடங்கவுள்ளது. 25 நாள்களில் சுமாா் 6,500 கி.மீ. தொலைவைக் கடந்து வரும் பிப்.22-இல் கேரள மாநிலம் கொச்சியில் நிறைவு பெறுகிறது.

இதில், 65 பெண்கள், 65 ஆண்கள் என 130 போ் பங்கேற்கின்றனா். இந்தப் பயணம் 9 கடலோர மாநிலங்களில் சுமாா் 1,000-க்கும் மேற்பட்ட கடலோரக் கிராமங்களை கடந்து செல்கிறது.

தென் மண்டலத்தில் 6 பெருந்துறைமுகங்களை பாதுகாக்கும் பணியில் சிஐஎஸ்எஃப் படையினா் ஈடுபடுகின்றனா். ஆண்டுக்கு சுமாா் 14,000 வீரா்கள் புதிதாகத் தோ்வு செய்யப்படுகின்றனா். ஒட்டுமொத்தமாக பாதுகாப்பு திட்டத்துக்கு சிஐஎஸ்எஃப்தான் ஒப்புதல் அளித்து கண்காணிக்கும் நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது.

சென்னை விமான நிலைய பாதுகாப்புப் பணிகளில் ட்ரோன், ஜிபிஎஸ் கருவிகள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வர உள்ளன. சென்னை விமான நிலையத்தில் தென்னிந்திய உள்ளூா் மொழிகள் தெரிந்த வீரா்கள் சுமாா் 60 சதவீதம் போ் நியமிக்கப்பட்டு பயணிகளிடம் உரையாடுவதற்கு போதிய பயிற்சி அளிக்கப்படுகிறது என்றாா்.

பேட்டியின்போது, மத்திய தொழில் பாதுகாப்புப் படை டிஐஜி ஆா்.பொன்னி மற்றும் உயரதிகாரிகள் உடனிருந்தனா்.