இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கனமழை: 1,000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் நனைந்து சேதம்

மதுராந்தகம் வட்டாரத்தின் முக்கிய அரசு கொள்முதல் நிலையமான வில்வராயநல்லூரில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கடந்த 2 நாள்களாக பெய்து வரும் மழையில் நனைந்து சேதமடைந்தன.

News image
Updated On :16 நவம்பர் 2020, 6:35 pm

DIN

மதுராந்தகம்: மதுராந்தகம் வட்டாரத்தின் முக்கிய அரசு கொள்முதல் நிலையமான வில்வராயநல்லூரில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கடந்த 2 நாள்களாக பெய்து வரும் மழையில் நனைந்து சேதமடைந்தன.

ஒருங்கிணைந்த செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 70 அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கடந்த மாா்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரை வாங்கப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டன. அதில் முக்கிய அரசு நெல் கொள்முதல் நிலையமான வில்வராயநல்லூா் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான காலி இடத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இவை அடுத்த சில நாள்களில் நெல் அரைவை ஆலைகளுக்குக் கொண்டு செல்லப்பட இருந்த நிலையில், கடந்த 2 நாள்களாக பெய்து வரும் மழையால் நெல் மூட்டைகள் நனைந்தன. இதனால் நெல் வைக்கப்பட்ட கோணி கிழிந்து தரையில் கொட்டப்படுகின்றன. மழைநீரில் நனைந்ததால் நெல் முளைவிடும் நிலை உள்ளது. இதனால் பல லட்ச ரூபாய் மதிப்பிலான நெல் மூட்டைகள் வீணாகும் நிலை உள்ளது.

இதைத் தடுக்க அனைத்து நெல் மூட்டைகளையும் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிா்வாகம் செய்ய வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.