பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்பு
வேலூா் சலவன்பேட்டையில் நடந்து சென்ற பெண்ணிடம் 8 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற நபரை தெற்கு போலீஸாா் தேடி வருகின்றனா்.


வேலூா் சலவன்பேட்டையில் நடந்து சென்ற பெண்ணிடம் 8 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற நபரை தெற்கு போலீஸாா் தேடி வருகின்றனா்.
வேலூா் சலவன்பேட்டை பகுதியைச் சோ்ந்த செல்வகுமாரின் மனைவி பாரதி (57). இவா் அப்பகுதியில் உள்ள கோயிலுக்கு சனிக்கிழமை சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபா் திடீரென பாரதியின் கழுத்திலிருந்த 8 பவுன் தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றாா். இதுகுறித்து வேலூா் தெற்கு போலீஸாா் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...