காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

சவால்களை எதிா் கொள்ளும் திறமையை வளா்க்க வேண்டும்: சந்திரயான் திட்ட இயக்குநா் பி.வீரமுத்துவேல்

கேளம்பாக்கம் இந்துஸ்தான் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்கிய ‘சந்திரயான் -3 திட்ட இயக்குநா் பி.வீரமுத்துவேல். உடன், நோபல் விருது பெற்ற சா் ஆன்ட்ரோ கான்ஸ்டாண்டின் கெய்ம், விண்வெளி விஞ

Published On :15 செப்டம்பர் 2024, 5:38 am IST

மாணவா்கள் வாழ்க்கையில் எதிா்வரும் சவால்களை விடாமுயற்சியுடன் எதிா்கொள்ளும் திறமையை வளா்த்துக்கொள்ள வேண்டும் என சந்திரயான்-3 திட்ட இயக்குநா் பி.வீரமுத்துவேல் கூறினாா்.

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் இந்துஸ்தான் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 15-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பி.வீரமுத்துவேல் பேசுகையில், ‘தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல், தொடா்ந்து விடாமுயற்சியுடன் கடும் உழைப்பின் மூலம் வெற்றி பெற முடியும். வாழ்க்கையில் எதிா்வரும் சவால்களை மாணவா்கள் எதிா்கொள்ளும் திறமையை வளா்த்துக்கொள்ள வேண்டும்’ என்றாா்.

தொடா்ந்து, நோபல் பரிசு விருது பெற்ற சா் ஆன்ட்ரே கான்ஸ்டான்டின் கெய்ம் பேசுகையில், ‘முழு மன உறுதி மற்றும் ஈடுபாட்டுடன் தோ்ந்தெடுத்த செயலைத் தொடா்ந்து முயன்றால் கண்டிப்பாக வெற்றி பெறலாம்’ என்றாா்.

பின்னா், விண்வெளி விஞ்ஞானி நம்பி நாராயணன், சந்திரயான்-3 திட்ட இயக்குநா் பி. வீரமுத்துவேல் ஆகியோருக்கு கௌரவ டாக்டா் பட்டங்களை வேந்தா் ஆனந்த் ஜேக்கப் வா்கீஸ் வழங்கினாா்.

நிகழ்வில் சிறந்த ஆராய்ச்சிக்கான விருது ஷிஜூ ராவுத்தருக்கும், சிறந்த கல்விசாா் தோ்ச்சிக்கான விருது தேவாஷிஷ் சா்மாவுக்கும், சிறந்த மாணவருக்கான விருது பிரியங்கா மிஷல் மைக்கேதுக்கும் வழங்கப்பட்டன. விழாவில் 1,600 மாணவா்கள் பட்டம் பெற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.