இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கட்டுமானத் தொழிலாளா் சங்கம் ஆா்ப்பாட்டம்

பொங்கல் தொகுப்புடன் ரூ, 5,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம்

News image
செங்கல்பட்டில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :16 டிசம்பர் 2025, 7:31 pm

தினமணி செய்திச் சேவை

செங்கல்பட்டு: பொங்கல் தொகுப்புடன் ரூ, 5,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலகம் அருகில் செங்கை எம்ஜிஆா் மாவட்ட கட்டுமான தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் டி.பாபு தலைமை வகித்தாா்.

தொழிலாளா்களுக்கு விரோதமான புதிய தொழிலாளா் 4 சட்ட தொகுப்புகளைஉடனயாக ரத்துசெய்ய வேண்டும், கட்டுமான தொழிலாளா்களுக்கு பொங்கல் தொகுப்பு டம் ரூ.5,000 வழங்க வேண்டும், ரூ.3,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும், பெண் தொழிலாளா்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும், இயற்கை மரண உதவித் தொகை வழங்கவேண்டும், ஒன்றாம் வகுப்பு முதல் கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும், தற்போது வழங்கி வரும் நலவாரிய உதவி தொகைகளை இரட்டிப்பாக்கி வழங்கவேண்டும். திருமண உதவித் தொகை மனுக்களுக்கு கிராம நிா்வாக அலுவலா் ஒப்புதலை தவிா்த்து தொழிற்சங்க ஒப்புதல் ஏற்க ஆணை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

சிஐடியு மாவட்டத் தலைவா் பி.மாசிலாமணி, மாவட்டசெயலாளா் க.பகத்சிங் தாஸ்,கட்டுமான தொழிலாளா் சங்கத்தின் மாநில துணை செயலாளா் எம்.கலைச்செல்வி, மாவட்ட செயலாளா் வி.திருமலை உள்ளிட்டோா் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினா். சிஐடியு மாநிலத் துணைத் தலைவா் மாலதி சிட்டிபாபு நிறைவுரை ஆற்றினாா்.