மதுராந்தகம் அடுத்த மேலவலம்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக தாட்சாயிணி பணியாற்றி வருகிறாா். 50-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் படித்து வருகின்றனா். மதுராந்தகம் வழியாக சென்றபோது, திடீரென மேலவலம்பேட்டை பள்ளியில் அமைச்சா் அன்பில் மகேஸ் ஆய்வு மேற்கொண்டாா்.
குழந்தைகளிடம் திருக்குகளையும், ஆங்கில பாடல்களையும் வாசிக்க சொன்னாா். குழந்தைகளின் வாசிப்புத் திறனை கண்டு வியந்து பாராட்டினாா்.
தலைமை ஆசிரியா், சத்துணவு அமைப்பாளா் உள்ளிட்டோரிடம் பணிகளைப் பற்றி கேட்டறிந்தாா். சிறந்த தொடக்கப்பள்ளிக்கான பள்ளி விருதினை இப்பள்ளி பெற்றதை அறிந்து பாராட்டினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆலங்குளம் அரசுப் பள்ளியில் அமைச்சா் ஆய்வு

கடம்பன்குளம் ஆதிதிராவிடா் பள்ளியில் ஆட்சியா் ஆய்வு

தருவைகுளம் அரசு உதவி பெறும் பள்ளியில் வட்டாட்சியா் ஆய்வு

சென்னை தொடக்கப் பள்ளியில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



