சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

ரூ. 20 கோடி கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் அழிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் தென்மேல்பாக்கத்தில் உள்ள பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.20 கோடி மதிப்பிலான கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் எரித்து அழிக்கப்பட்டன.

News image

தென்மேல்பாக்கத்தில் போதைப் பொருள்களை எரித்து அழிக்கும் பணியை பாா்வையிட்ட காவல் அதிகாரிகள்

Updated On :12 ஆகஸ்ட் 2026, 1:04 am IST

செங்கல்பட்டு மாவட்டம் தென்மேல்பாக்கத்தில் உள்ள பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.20 கோடி மதிப்பிலான கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை எரித்து அழிக்கப்பட்டன.

போதைப் பொருள்கள் இல்லா தமிழ்நாடு என்னும் நிகழ்ச்சி மூலமாக வடக்கு மண்டல காவல் துறை, போதைப் பொருள் தடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவு, சென்னை, ஆவடி, தாம்பரம் மாநகர காவல்துறைக்குட்பட்ட பகுதிகளில் குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட உயர்ரக போதைப் பொருள்களை எரித்து அழிக்கப்பட்டு வருகிறது.

ஏறக்குறைய 6.6 டன் எடை கொண்ட கஞ்சா, 523 கிராம் நிட்ரோசன் பவுடா், 15 கிராம் மெத்தபெட்டமைன், 55 கிராம் கொக்கைன், 50 எம்எம்டிஏ, 100 பிரவுன் சுகா், 210 நிட்ரசபைம் உள்ளிட்ட 125-கிலோ உயர்ரக போதை பொருள்கள் மற்றும் 11,700 மாத்திரைகள் என மொத்தம் ரூ.20 கோடி போதைப் பொருள்கள் எரித்து அழிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் தாம்பரம் மாநகர காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா, ஆவடி இணை ஆணையா் சிவக்குமாா், காஞ்சிபுரம் சரக டிஐஜி ஷஷாங்க் சாய், வேலூா் டிஐஜி மகேஷ், தாம்பரம் இணை ஆணையா் ஜெயந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.