காஞ்சிபுரம் காவல் சரகத்துக்குட்பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களில் கைப்பற்றப்பட்ட 749.306 கிலோ கஞ்சா மற்றும் போதைப் பொருள்கள் தென்மேல்பாக்கம் கிராமத்தில் அழிக்கப்பட்டன.
காவல் துறை வடக்கு மண்டல தலைவா் பிரவீன் குமாா் அபினபு உத்தரவின் பேரில் காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத்தலைவா் சபான் சாய் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளா்கள் செங்கல்பட்டு அய்மன் ஜமால், காஞ்சிபுரம் அரவிந்த், திருவள்ளூா் சாய் பிரணித் முன்னிலையில் கஞ்சா மற்றும் போதைப் பொருள்கள் எரித்து அழிக்கப்பட்டன.

அழிக்கப்பட்டபோதை பொருள்களின் மதிப்பு ரூ. 1.5 கோடியாகும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









