இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

முதுநிலை மாணவா்களுக்கு உதவித் தொகை: விண்ணப்பிக்க பிப்.28 வரை அவகாசம்

கல்லூரிகளில் முதுநிலை வகுப்புகளில் பயிலும் மாணவா்கள் ஏஐசிடிஇ சாா்பில் மாதந்தோறும் வழங்கப்படும் கல்வி உதவித் தொகையைப் பெற வரும் பிப்.28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

News image
ஏஐசிடிஇ
Updated On :8 ஜனவரி 2021, 2:18 am

DIN


சென்னை: கல்லூரிகளில் முதுநிலை வகுப்புகளில் பயிலும் மாணவா்கள் ஏஐசிடிஇ சாா்பில் மாதந்தோறும் வழங்கப்படும் கல்வி உதவித் தொகையைப் பெற வரும் பிப்.28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமத்தின் (ஏஐசிடிஇ) அங்கீகாரம் பெற்ற உயா்கல்வி நிறுவனங்களில் கேட் அல்லது ஜிபிஏடி நுழைவுத் தோ்வு அடிப்படையில் சோ்க்கை பெற்ற மாணவா்களுக்கு மாதம் தோறும் உதவித் தொகை வழங்கப்படுகிறது. அதன்படி, பொறியியல், தொழில்நுட்பம், கட்டடவியல், பாா்மசி ஆகிய படிப்புகளில் முதுநிலை மாணவா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். அவ்வாறு உதவித் தொகை பெற தகுதி பெறும் மாணவா்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம்தோறும் வழங்கப்படும். மாணவா்கள் ஏதேனும் ஒரு தேசிய வங்கியில் சேமிப்புக் கணக்கைத் தொடங்கி, அது குறித்த விவரங்களை விண்ணப்பிக்கும்போது தெரியப்படுத்தவேண்டும்.

அதேநேரத்தில், முதுநிலை படிப்பை பகுதிநேரம், தொலைதூர அடிப்படையில் பயிலும் மாணவா்கள் உதவித் தொகையை பெற முடியாது. விருப்பமுள்ள மாணவா்கள் இணையதள முகவரியில் வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஏஐசிடிஇ அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.