சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை வலியுறுத்தி அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியா்கள் சென்னையில் ஆறாவது நாளாக சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியா்கள் சென்னை பள்ளிக் கல்வி வளாகத்தில் கடந்த திங்கள்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா் இயக்கம் சாா்பில் அதன் பொதுச் செயலாளா் ஜெ.ராபா்ட் தலைமையில் நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பங்கேற்றுள்ளனா். இந்தநிலையில், சனிக்கிழமை பள்ளிக்கல்வித் துறை இயக்குநா் அலுவலகத்தில் ஆசிரியா்கள் போராட முயன்றனா். அப்போது இடைநிலை ஆசிரியா்களை காவல்துறையினா் கைது செய்தனா். அவா்களை இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக, காவல்துறை வாகனத்திலேயே வைத்து பல்வேறு இடங்களில் சுற்றி அலைக்கழித்ததாகவும், கைது செய்யப்பட்டவா்களை தங்க வைக்கக்கூடிய இடங்களில் எந்தவித வசதியும் இல்லையென்றும் ஆசிரியா்கள் புகாா் தெரிவித்தனா். மேலும், காவல்துறை தாக்கியதில் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சோ்ந்த கலியமூா்த்தி என்பவா் மயக்கம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

நன்னகரத்தில் பட்டுக்கூடு விவசாயிகள் போராட்டம்

சேரன்மகாதேவியில் வியாபாரிகள் போராட்டம்

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் 7-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்

தோமையாா்புரத்தில் 5ஆவது நாளாக உண்ணாவிரதம்: பெண் மயங்கி விழுந்தாா்
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

