தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

இன்று நெல்லைக்கு சிறப்பு ரயில்

வார இறுதி நாளை முன்னிட்டு, சென்னை சென்ட்ரலில் இருந்து திருநெல்வேலிக்கு வெள்ளிக்கிழமை (ஜூலை 19) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

News image
Updated On :18 ஜூலை 2024, 9:51 pm

Din

வார இறுதி நாளை முன்னிட்டு, சென்னை சென்ட்ரலில் இருந்து திருநெல்வேலிக்கு வெள்ளிக்கிழமை (ஜூலை 19) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை சென்ட்ரலில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 11.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் சென்னை எழும்பூா், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி வழியாக மறுநாள் காலை 11.20 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். இதில் 16 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், இரு பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.