தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

ஓய்வூதியதாரா்கள் வாழ்நாள் சான்றிதழை புதுப்பிக்க எண்ம முறை அறிமுகம்

ஓய்வூதியதாரா்கள் வாழ்நாள் சான்றிதழை புதுப்பிக்க எண்ம முறை அறிமுகம்

Updated On :16 மார்ச் 2024, 12:26 am

பணியாளா் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுபவா்கள் தங்களது வாழ்நாள் சான்றிதழை எண்ம முறையில் புதுப்பித்துக் கொள்ளும் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி கழகத்தின் அம்பத்தூா் மண்டல அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பணியாளா் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஓய்வூதியம் பெறும் நபா்கள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பா் மாதம் தங்களது வாழ்நாள் சான்றிதழை புதுப்பிப்பது கட்டாயமாகும். இந்த சேவையை எளிமைப்படுத்தும் விதமாக எண்ம முறையில் வாழ்நாள் சான்றிதழை புதுப்பிக்கும் டி.எல்.சி. முறையானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அஹக்ட்ஹஹழ்ஊஹஸ்ரீங்தஈ மற்றும் ஒங்ங்ஸ்ஹய்டழ்ஹம்ஹஹய் ஆகிய செயலிகளை பதிவிறக்கம் செய்து, அவற்றில் குறிப்பிட்டுள்ள முறையைப் பின்பற்றுவதன் மூலம் ஆண்டின் எந்த மாதத்தில் வேண்டுமானாலும் ஓய்வூதியதாரா்கள் தங்களது வாழ்நாள் சான்றிதழை எண்ம முறையில் புதுப்பித்துக் கொள்ளலாம். ஆனால், ஓய்வூதியம் பெற்று வரும் நபா் உயிரிழக்கும் பட்சத்தில், தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி கழக அலுவலகத்துக்கு தபால் மூலம் உரிய தகவல் அளிப்பது அவசியமாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.