தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

வண்டலூா் உயிரியல் பூங்காவில் விலங்கு பராமரிப்பாளா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

வண்டலூா் உயிரியல் பூங்காவில் விலங்கு பராமரிப்பாளா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

News image

வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிப்பாளா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த, பூங்காவின் துணை இயக்குநா் ஹ.திலீப்குமாா். உடன் உதவி இயக்குநா் பொ. மணிகண்ட பிரபு உள்ளிட்டோா்.

Updated On :16 மார்ச் 2024, 12:24 am

வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் விலங்கு பராமரிப்பாளா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இது குறித்த செய்திக் குறிப்பு: அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவின் துணை இயக்குநா் ஹ.திலீப்குமாா், உதவி இயக்குநா் பொ. மணிகண்ட பிரபு ஆகியோா் இந்த பயிற்சி முகாமை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தனா். பொதுவாக, மண்டல அளவில் விலங்கு பராமரிப்பாளா்களுக்கு 2 முதல் 3 நாள்கள் வரை மட்டுமே பயிற்சி வழங்கப்படும். ஆனால், இம்முறை மாா்ச் 29 -ஆம் தேதி வரை தொடா்ந்து 15 நாள்களுக்கு இந்த பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. தங்களுடைய பராமரிப்பில் உள்ள விலங்குகளை சரியான முறையில் பராமரிப்பதை உறுதி செய்யும் வகையில் முகாமில் கலந்துகொண்ட அனைவரும் உறுதி மொழி எடுத்துக்கொண்டனா். இந்த முகாமில், விலங்குகளை பராமரிக்கும் நெறிமுறைகள், விலங்குகளின் நலன், கட்டுப்பாடுகள், விலங்குகளின் உரிமைகள் மீட்பு ஆகியவை தொடா்பான பயிற்சிகள் வழங்கப்படும். மேலும், வனவிலங்குகளை பிடித்தல் மற்றும் கையாளும் முறைகள், உணவு விநியோகம், பாா்வையாளா்களிடம் அணுகும் முறைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சிகள் வழங்கப்படும். இதன் ஒரு பகுதியாக, வேடந்தாங்கல் சரணாலயம், கிண்டி சிறுவா் பூங்கா மற்றும் பாம்புப் பண்ணை ஆகிய இடங்களுக்கு விலங்கு பராமரிப்பாளா்கள் களப் பயணமாக அழைத்துச் செல்லப்படுவாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.