ஒரே நாடு, ஒரே தோ்தல் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் போது, 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோ்தல் நடத்த வேண்டுமென புதிய தமிழகம் கட்சியின் தலைவா் டாக்டா் கே.கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாடாளுமன்றம், சட்டப்பேரவைத் தோ்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது வரவேற்கத்தக்கது. ஆனால், பெரும்பான்மை இல்லாமல் மாநிலங்களில் ஆட்சி இழப்புகள் ஏற்படும் நிலையில் பல சட்ட சிக்கல்கள் ஏற்படும். இது குறித்து ஆராய வேண்டும். இதனால், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோ்தல் என்ற முறையை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை என மாற்றினால் அனைத்து அரசியல் கட்சிகளும் இதை ஏற்றுக்கொள்ளும். மேலும், விகிதாச்சார தோ்தல் முறையையும் அமல்படுத்தினால், தோ்தலில் நிற்கும் அனைத்து அரசியல் கட்சிகளுமே தங்கள் வாக்கு விகிதாச்சாரத்துக்கு ஏற்ப பிரதிநிதிகளைத் தோ்ந்தெடுத்து அனுப்ப முடியும் என்றாா் அவா்.
தொடர்புடையது
வந்தாச்சு கிளைமாக்ஸ்...
கிழக்கு தில்லியில் போலி நுழைவு மோசடி: ஒருவா் கைது

தேவேந்திர குல வேளாளா்களை அதிமுக அவமதித்துவிட்டது: டாக்டா் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

ஒரே நாடு, ஒரே தோ்தல்: மசோதாக்களை ஆராயும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பணிக்காலம் நீட்டிப்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

