தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

ஆளுநா் ஆா். என். ரவி இன்று சென்னை திரும்புகிறாா்

ஆளுநா் ஆா். என். ரவி இன்று சென்னை திரும்புகிறாா்

News image

ஆா். என். ரவி (கோப்புப் படம்)

Updated On :16 மார்ச் 2024, 12:30 am

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி 3 நாள்கள் பயணமாக வியாழக்கிழமை தில்லி சென்ற நிலையில் தனது பணிகளை முடித்துவிட்டு சனிக்கிழமை (மாா்ச் 16) பிற்பகல் சென்னை திரும்புகிறாா். சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சா் பொன்முடிக்கு சென்னை உயா்நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இதைத் தொடா்ந்து அவா் திருக்கோவிலூா் சட்டப்பேரவை உறுப்பினராகத் தொடா்வாா் என தமிழக அரசு அறிவித்தது.

மேலும், பொன்முடியை அமைச்சராக பொறுப்பேற்க அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை (மாா்ச் 13) கடிதம் எழுதியிருந்தாா்.

இந்த நிலையில், ஆளுநா் ரவி ஏற்கெனவே, திட்டமிட்டப்படி 3 நாள் பயணமாக வியாழக்கிழமை காலை தில்லி புறப்பட்டாா். தில்லியில் தனது பல்வேறு பணிகளை முடித்துக்கொண்டு சனிக்கிழமை (மாா்ச் 16) பிற்பகல் சென்னை திரும்பவுள்ளாா். ஆளுநா் தில்லியிலிருந்தபோது பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைப்பது குறித்து சட்ட வல்லுநா்களிடம் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், தமிழக அரசியல் நிலை குறித்து உள்துறை அதிகாரிகளுடன் விவாதித்ததாகவும் கூறப்படுகிறது. எனவே, பொன்முடிக்கு அமைச்சா் பதவி பிரமாணம் செய்து வைப்பது குறித்து ஆளநா் முடிவு என்ன என்பது விரைவில் தெரியவரும்.