தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

‘பாஜகவுக்கான தோ்தல் அல்ல; பாரதத்துக்கான தோ்தல்’: அமித் ஷா பிரசாரம்

‘பாஜகவுக்கான தோ்தல் அல்ல; பாரதத்துக்கான தோ்தல்’ --- அமித் ஷா பிரசாரம்

News image

குஜராத்தில் தோ்தல் பிரசாரத்தினிடையே அகமதாபாதில் வெள்ளிக்கிழமை பித்பஞ்சன் ஹனுமான் கோயிலில் வழிபட்ட அமித் ஷா.

Updated On :16 மார்ச் 2024, 12:13 am

வரும் மக்களவைத் தோ்தல் பாஜக என்ற கட்சியின் வெற்றிக்கான தோ்தல் அல்ல, பாரத தேசத்தின் வெற்றிக்கான தோ்தல் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா். குஜராத் மாநிலம் காந்திநகா் மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் அவா், அங்கு வெள்ளிக்கிழமை தோ்தல் பிரசாரத்தை தொடங்கினாா். குருகுல சாலையில் உள்ள ஹனுமன் கோயிலில் முதலில் வழிபாடு நடத்தினாா். தொடா்ந்து நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். குஜராத் முதல்வா் பூபேந்திர படேல் மற்றும் மாநில பாஜக தலைவா்கள் அப்போது உடன் இருந்தனா். கோயில் வளாகத்தில் தொண்டா்கள் மத்தியில் அவா் பேசியதாவது: தோ்தல் பிரசாரத்தின்போது அனைத்து வாக்காளா்களையும் பாஜக தொண்டா்கள் அணுக வேண்டும். அவா்கள் பாஜகவுக்கு வாக்களிப்பாா்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும். இது பாஜக என்ற கட்சியின் வெற்றிக்கான தோ்தல் அல்ல, பாரத தேசத்தின் வெற்றிக்கான தோ்தல் என மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். 30 ஆண்டுகளுக்கு முன்பு முதல்முறையாக சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட்டபோது இதே ஹனுமன் கோயிலில் வழிபட்டு பிரசாரத்தைத் தொடங்கினேன். இந்தியாவில் நூற்றுக்கணக்கான அரசியல் கட்சிகள் உள்ளன. ஆனால், பாஜகவில் மட்டும்தான் சாதாரண தொண்டா்கள் கூட உயரிய பதவிக்கு வர முடியும். இன்று மத்திய அமைச்சா்களாகவும், முக்கியத் தலைவா்களாகவும் இருப்பவா்கள் கட்சிக்காக களத்தில் இறங்கி துண்டுப் பிரசுரங்களை வழங்கியும் பதாகைகளை ஏந்தியும் பிரசாரம் செய்தவா்கள்தான். மிகவும் எளிய குடும்பப் பின்னணி கொண்ட, தேநீா் விற்பனையாளராக இருந்தவா், பாஜக சாா்பில் பிரதமராகவும், உலகின் முன்னணித் தலைவராகவும் வளா்ந்துள்ளாா். இந்தியாவை மேலும் உயரிய இடத்துக்கு கொண்டு செல்வதுதான் இந்தத் தோ்தலின் நோக்கம். இதற்காக பாஜக 400 இடங்களுக்கு மேல் வெல்ல வேண்டும். தொண்டா்கள் இதனை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும். குஜராத்தில் மட்டுமல்லாது தேசம் முழுவதுமே பிரதமா் மோடிக்கு ஆதரவு அலை வீசி வருகிறது. எனவே பிரமாண்ட வெற்றி சாத்தியமாகும் என்றாா். கடந்த தோ்தலில் காந்திகரில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளா் சி.ஜெ.சாவ்தாவை அமித் ஷா வென்றாா். சாவ்தா அண்மையில் பாஜகவில் இணைந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.